Friday, April 26, 2024 2:19 pm

பிரம்மாண்ட இயக்குனருக்கு ஒகே சொன்னாரா அஜித் !!ஷங்கர் படத்தில் வில்லனாகும் அஜீத் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்தின் ‘ஏகே 62’ இந்திய திரைப்பட வர்த்தகத்தில் பெரும் சத்தத்தை ஏற்படுத்தி வருகிறது, வரவிருக்கும் தமிழ் திரைப்படத்தின் குறிச்சொல்லைத் தட்டுகிறது. அனிருத் இசையமைப்பாளராகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்யா, அருள்நிதி, காஜல் அகர்வால் போன்ற முக்கிய நட்சத்திரங்களுடன் முக்கிய கதாபாத்திரங்களுக்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருங்கள்.

பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தை தற்போதைக்கு ஆர்.சி. 15 என்கிறார்கள். படத்தின் தலைப்பு மார்ச் 27ம் தேதி வெளியிடப்படுகிறதாம்.ஆர்.சி. 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். ஆனால் படத்தின் வில்லன் யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் தான் ராம் சரணுக்கு வில்லனாக நடிக்குமாறு அஜித் குமாரிடம் ஷங்கர் கேட்டாராம்.

அஜித்தும் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடித்தால் நல்லவனாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அடம்பிடிக்காத ஆள் அஜித். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான வாலி படத்திலேயே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இன்றளவும் பேசப்படுகிறது.

அதன் பிறகும் பல படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார். அஜித்தை வில்லனாக பார்த்தால் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். இந்நிலையில் அவர் மட்டும் ராம் சரணுக்கு வில்லனாக நடித்தால் அந்த படம் நிச்சயம் பெரிய அளவில் ரீச்சாகும் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

ஆர்.சி. 15 பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. அந்த படத்திற்கு சி.இ.ஓ. என தலைப்பு வைக்கப் போகிறார்கள் என கூறப்படுகிறது. அஜித் தன் உடல் எடையை குறைத்து, புது ஹேர்ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களை அவரை பற்றியே பேச வைத்தது.

அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்திற்காக தான் அப்படி வெறித்தனமான லுக்கிற்கு மாறியிருக்கிறாரோ என்றார்கள் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் மகிழ் திருமேனி அல்ல ஷங்கர் படத்தில் வில்லத்தனம் செய்யத் தான் அஜித் அப்படி மாறியிருக்கிறாரோ என ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆர்.சி. 15 ஹீரோவான ராம் சரண் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ராம் சரண் அமெரிக்காவில் இருக்கும் இந்த நேரத்தில் உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஷங்கர். அப்படி சதுரங்கபட்டினத்தில் சில சண்டைக் காட்சிகளை படமாக்கியபோது கிராமத்து மக்கள் அங்கு கூடிவிட்டார்கள்.

அஜீத் குமார் சமீபத்தில் எச்.வினோத் இயக்கிய ‘துணிவு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்து வெளிநாட்டுக் கரையில் குடும்பத்துடன் குலுங்கிக்கொண்டிருக்கிறார். லண்டனில் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் ஆகியோருடன் அவர் வரவிருக்கும் ‘ஏகே 62’ படத்தின் கதை விவாதங்களிலும் அவர் மிகவும் ஈடுபட்டிருந்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்