மார்ச் 2022 இல், விக்னேஷ் சிவன் அஜித் குமார் நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும், #AK62 என குறிப்பிடப்படும் இந்த திட்டத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. பொங்கலுக்குப் பிறகு மாடிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டத்திற்காக அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் இணைக்கப்பட்டதாக கூட செய்திகள் வந்தன.
ஏனென்றால் விக்னேஷ் சிவன் தயார் செய்து வைத்திருந்த கதை அஜித்துக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தால் அவரை கழட்டி விட்டுள்ளனர். ஆனால் அதையும் மீறி விக்னேஷ் சிவன் லண்டன் வரை சென்று தயாரிப்பாளரிடம் இதே கதையை கூறியுள்ளார்.
உடனே லைக்கா தயாரிப்பு நிறுவனம் இந்த கதையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, 8 மாதம் உங்களுக்கு காலவகாசம் கொடுத்து கதையை ரெடி பண்ண சொன்னால் இப்படி ஒரு குப்பை கதையை எடுத்து வந்துள்ளீர்களே என்று கூறியுள்ளார்கள். தற்போது விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியானது.
இருப்பினும் வாய்ப்பு கொடுத்து மோசம் செய்த லைக்கா நிறுவனத்தின் மீது விக்னேஷ் சிவன் பெரும் அதிருப்தியில் இருக்கிறார். இது விக்னேஷ் சிவனுக்கு புதிதல்லையாம். நான்கு வருடங்களுக்கு முன்பே லைக்கா இதே போன்ற வேலையை பார்த்திருக்கிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாகவும் அதற்கு பதிலாக மற்ற இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும் விஷ்ணுவர்தன் மற்றும் மகிழ் திருமேனி இவர்களுள் ஒருவர் ஏகே 62 படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.
இந்த சூழலில் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாகவும் அஜித்துக்கு எதிராகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் செய்த காரியத்தால் ரசிகர்கள் சற்று குழப்பத்தை அடைந்துள்ளனர். அதாவது ஏகே 62 படப்பிடிப்புக்கு முன்பே இந்த படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் பற்றி இருந்தது.
அதாவது ஏகே 62 படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் தியேட்டர் ரிலீஸுக்கு பின்பு நெட்பிளிக்சில் வெளியாகும் என்ற அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால் இப்போது பதிவிற்கு விக்னேஷ் சிவன் லைக் போட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மேலும் குழப்பம் அடைந்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸின் பதிவிற்கு தற்போது லைக் போட்டுள்ளதால் ஏகே 62 படத்தில் இருந்து விலகவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. மேலும் அஜித் தனக்கு தோல்வி படம் கொடுத்தாலும் அந்த ஹீரோவுடன் ஹிட் படம் கொடுத்து விட்டு தான் வேறு ஒரு இயக்குனர் படத்தில் நடிப்பார். இப்படி இருக்கையில் விக்னேஷ் சிவனை எப்படி கைவிடுவார்.
எனவே விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் கூட்டணியில் ஏகே 62 படம் உருவாவது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இந்த வாரத்திற்குள் லைக்கா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. ஆகையால் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் இன்று அவர் போட்ட டீவீட்டை அவரே லைக் செய்து மீண்டும் உறுதி செய்துள்ளார் .நீங்களே பாருங்க
இதற்கிடையில், இயக்குனர்கள் அட்லீ, விஷ்ணு வரதன் மற்றும் மகிழ் திருமேனி ஆகியோரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும் நிலையில், அட்லீ மற்றும் விஷ்ணு வரதன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக வெளியான செய்திகள் பொய்யான செய்தி என்று எங்கள் வட்டாரம் கூறுகிறது. அட்லீயும் விஷ்ணுவும் பாலிவுட் கமிட்மென்ட்களில் பிஸியாக இருக்கும்போது, மகிழ், ஏற்கனவே ஒரு முடிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் தயாராக உள்ளது, இது அவருக்கு சாதகமாக அமைந்தது. மேலும் சில இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டாலும், தடம் படத் தயாரிப்பாளரே இந்த திட்டத்தை இயக்க முன்னோடியாக உருவெடுத்துள்ளார்.