மைனர் சிறுமிக்கு எதிராக பாலியல் ரீதியில் கருத்து தெரிவித்ததாக போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநரான 38 வயது நபரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் புழல் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் எனத் தெரியவந்தது.
கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி, பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் அவரை வழிமறித்து பாலியல் ரீதியாகப் பேசினார். இச்சம்பவம் அக்டோபர் 28 அன்று நடந்தது.
அங்கிருந்து தப்பி ஓடிய சிறுமி தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணைக்கு பின், போலீசார், செல்வகுமாரை கைது செய்தனர். அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.