அஜித் குமார் மூன்றாவது முறையாக இயக்குனர் ஹெச் வினோத் உண்டன் இணைந்து நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து மூன்றாவதாக துணிவு திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த படம் ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனால் பட குழு அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் துணிவு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் போஸ்ட் ப்ரோமோஷன் செய்ய தயாராக உள்ளதாகவும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், போன்ற பல இடங்களில் படமாக்கப்பட்டு முடிந்துள்ள நிலையில் பாங்காங் சென்ற பட குழுவினர் அங்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் ஒரு மாஸ் கெட்டப்பில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தன்னோட பாணியில் உருவாக்கியுள்ளதாக இயக்குனர் எச் வினோத் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார் இதனால் அஜித் குமார் இந்த படத்தில் ஒரு மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Thunivu likely to release on January 12, #Varisu from January 13!
— Rajasekar (@sekartweets) October 13, 2022
இந்நிலையில் அஜித்தின் துணிவு படம் ஜனவரி 12 ஆம் தேதி அன்று வெளியாகும் எனவும் வாரிசு படம் ஜனவரி 13 தேதி வெளியாகும் எனவும் திருப்பூர் சுப்பிரமணியம். கூறிஉள்ளார் .இது தற்போது வைரலாகி வருகிறது
மேலும் அஜித் நடித்து முடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளதாக ஒரு மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதேசமயம் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளதால் இந்த இரண்டு திரைப்படங்களும் மோதும் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பையும் வெளியிடவில்லை விரைவில் அவர்கள் அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.