சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 20வது படமான ‘மாவீரன்’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் அதிதி ஷங்கர், பழம்பெரும் நடிகை சரிதா, பிரபல இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டான் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். அது போக மாவீரன் என்ற படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதிஷங்கர் நடிக்கிறார்.
இந்த நிலையில் மாவீரன் படத்தில் அதிதியை கமிட் செய்ய காரணம் கோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதாவது கூடிய சீக்கிரம் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தை தொடங்க இருக்கிறார். 25வது படம் என்பதால் அந்த படத்தை மாஸான இயக்குனர்களை வைத்து எடுத்து விடலாம் என்ற ப்ளானில் இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
அவரது லிஸ்டில் இயக்குனர் ஷங்கர், ராஜமௌலி, போன்ற இயக்குனர்கள் இருக்கிறார்களாம். அதை கருத்தில் கொண்டு தான் ஷங்கரின் மகளை மாவீரன் படத்திற்காக கமிட் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
மறுபுறம், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளியன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த திட்டத்துடன் டோலிவுட் துறையில் கால்பதிக்கும் எஸ்கே, இருமொழி படமான ‘பிரின்ஸ்’ படத்திற்காக முதன்முறையாக தெலுங்கில் டப்பிங் பேசவுள்ளார்.