வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2011ல் வெளியான திரைப்படம் மங்காத்தா. இந்த திரைப்படம் வெளியான சமயம் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படமாகவும், மிகப்பெரிய வசூல் அள்ளிய திரைப்படமாகவும் அமைந்தது.
அதுபோக இந்த திரைப்படம் அஜித்தின் 50-வது திரைப்படம் ஆகவும் அஜித் முழு வில்லனாகவும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் வெங்கட் பிரபு அஜித் இணைவார்களா.? மஙகாத்தா இரண்டாம் பாகம் உருவாகுமா? என ரசிகர்கள் எப்போதும் வெங்கட் பிரபுவை கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
பொறுத்து..பொறுத்து.. பார்த்த வெங்கட பிரபு ஒரு சமயம் அஜித் ஓகே சொன்னால் மங்காத்தா இரண்டாம் பாகத்தை எடுத்து விடலாம் என கூறிவிட்டார். அதன் பிறகு, அஜித் எப்போது ஓகே சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
அஜித்தும், வெங்கட் பிரபுவும் மங்காத்தா திரைப்படத்திற்கு முன்பு இருந்தே நண்பர்கள் போன்று பழகி வந்தனர். இந்த பதிலை பார்த்து ஒருமுறை வெங்கட் பிரபுவை அஜித் அழைத்து, ‘மங்காத்தா இரண்டாம் பாகம் கேட்டால் நீ என்னை மாட்டி விடுகிறாயா? ‘என்று கடிந்து கொண்டாராம். இந்த தகவலை அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்து கொண்டார்.