கன்னடத்தில் கவிதைகளை இசையமைக்கும் வகையிலான ‘சுகம சங்கீதா’ துறையில் தனது பணிக்காக அறியப்பட்ட சிவமொக்கா சுப்பண்ணா.
ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் குவேம்பு எழுதிய பாடல்களின் மூலம் சுப்பண்ணா பிரபலமானார். குவேம்பு எழுதிய பாரிசு கன்னட டிண்டிமாவா பாடலைப் பாடிய பிறகு அவர் கர்நாடகாவில் பிரபலமானார்.
1979-ம் ஆண்டு வெளியான ‘காடு குதுரே’ என்ற கன்னட படத்தில் இடம்பெற்ற ‘காடு குதுரே ஓடி பந்திட்டா’ என்ற பாடலைப் பாடியதற்காக சுப்பண்ணா தேசிய விருதைப் பெற்றார். பின்னணி பாடலுக்காக தேசிய விருதை வென்ற முதல் கன்னட மொழிப் பாடகர் சுப்பண்ணா ஆவார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுப்பண்ணா, பெங்களூருவில் உள்ள ஜெயதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மரணம் குறித்து அறிந்ததும் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவர் ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் பாடகராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சிவமொக்கா சுப்பண்ணாவுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். மறைந்த பாடகரின் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிரதமர் மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
The exceptional Shivamogga Subbanna was a household name for those who love Kannada songs and music. His works are admired and so are his efforts to connect gems of Kannada poetry with the present generation. Pained by his demise. Condolences to his family and admirers. Om Shanti
— Narendra Modi (@narendramodi) August 12, 2022