அஜீத் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜான் கொக்கன், வீரா, அஜய் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மஞ்சு வாரியரும் விரைவில் சென்னை படப்பிடிப்பின் இறுதி அட்டவணையில் ஒரு பகுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் வெளியாகி மலையாள சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் பார்க்க வைத்த திரைப்படம் என்றால் “ஐயப்பனும் கோஷியும்” என்று கூறலாம். இந்த படத்தை இயக்குனர் சச்சி என்பவர் இயக்கி இருந்தார். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அந்த அளவிற்கு அருமையாக இருந்திருக்கும்.
இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குனர் சச்சிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சச்சி, தற்போது இந்த உலகத்தில் இல்லை. ஆம், உடல் நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் காலமானார். இந்நிலையில் ஐயப்பனும் கோஷியும் வெளியான பிறகு படத்தை பார்த்து விட்டு பலர் இயக்குனர் சச்சிக்கு கால் செய்து பாராட்டினார்கள்.
அந்த வகையில், நடிகர் அஜித் ஐயப்பனும் கோஷியும் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சர்ச்சியை பாராட்டியதாகவும், தனக்கும் அதே போல ஒரு கதையை தயார் செய்ய சொன்னதாகவும் கூறப்படுகிறது. அஜித் சொன்னதால், இயக்குனர் சச்சியும் ஒரு கதையை தயார் செய்தாராம்.
ஆனால், தற்போது சச்சி உயிரோடு இல்லாததால், அந்த படத்தை எடுக்கமுடியவில்லை. ஒரு வேலை சச்சி உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவர் அஜித்தை வைத்து ஒரு தரமான படத்தை இயக்கியிருப்பார். படமுமும் வேற லெவலில் இருந்திருக்கும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
47வது மாநில படப்பிடிப்பு போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்துள்ள நடிகர் அஜித்குமார், விரைவில் இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘AK61’ படத்தின் செட்டில் இணையவுள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக இப்படத்தின் நடிகர்களுடன் இணைவதாக சமீபத்திய சலசலப்பு.