விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று பெரிய திரைகளில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த காதல் நகைச்சுவை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பெரும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நேற்று நடந்த ட்விட்டர் உரையாடலின் போது, அஜித்தின் 62வது படத்தை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள விக்னேஷ் சிவனிடம், படம் குறித்த அப்டேட் கேட்கும் ரசிகர்களின் கேள்விகள் விரைந்தன. ‘ஏகே 62’ படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், விரைவில் அதை நேர்த்தியாக முடிப்பதாகவும் விக்னேஷ் சிவன் ஒரு புதுப்பிப்பைப் பகிர்ந்துள்ளார்.
சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவன் செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவனோடு பேசியுள்ள அஜித் தனக்காக எந்த காட்சியும் சேர்க்கவேண்டாம் என்றும் ரசிகர்களை மனதில் வைத்து திரைக்கதை எழுதுமாறும் அட்வைஸ் செய்துள்ளாராம்.
இதனால் ஹேப்பி ஆன விக்னேஷ் சிவன் பணியில் உற்சாகமாக செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.