சினிமாத்துறையில் பேசுவதெல்லாம் சர்ச்சையாக பேசி மாட்டிக்கொள்பவர்கள் மத்தியில் மேடையிலேயே ஏடாகுடமாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் தான் ராதாரவி. வில்லனாக வலம் வந்த ராதாரவி தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கனல் என்ற படத்தில் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சில விசயங்கள் சர்ச்சையில் மாட்டியுள்ளது. கனல் படத்தில் நடித்த அனைவர் பற்றியும் பேசிய ராதாரவி, கதாநாயகி பற்றி பேசும் போது, ஒரு படத்தின் நடிகை தமன்னாவை விமானநிலையத்தில் பார்த்த போது சுற்றுசிற்று பார்த்த போது ஒரு பக்கம் கூட கருப்பு இல்லை.
எங்கயாவது கருப்பு இருக்காதா என்று பார்த்தேன். இந்த பொண்ணு க்ளாமரா நடிப்பானு வேறொரு எண்ணத்தில் வந்தேன். ஆனால் வேறமாதிரி நடித்திருக்கிறார் கதாநாயகி.
இப்படி பேசியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இணையத்தில் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறார் ராதாராவி.