கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்தே’ படத்தில் நடித்த நடிகை மீனா, நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த கணவர் வித்யாசாகரை இழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். கோலிவுட் அதிர்ச்சியில் உள்ளது, மேலும் பிரபலங்கள் முன்னாள் ஹீரோயினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மாமியார் மற்றும் மாமனார் உடன் இருப்பதால் தான் பிரச்சனை என்று பெங்களூரில் இருந்து சென்னை வந்த மீனா கணவரையும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார், பெங்களூரில் படித்து வந்த மகளை சென்னைக்கு மாற்றியுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடுமையாக மனஉளைச்சலில் இருந்து வந்த மீனா கணவர்ருக்கு குறிப்பாக தன்னுடைய மனைவி மலையாள நடிகர் மோகன்லால் உடன் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தது.
மேலும் மோகன்லால் உடன் நெருக்கமாக நடித்து வந்தது மிகுந்த வேதனையை தந்துள்ளது இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார் மீனா கணவர் வித்யாசாகர், மன உளைச்சலில் ஏற்கனவே இருந்து வந்த வித்யாசாகருக்கு கொரோனா தோற்று வந்த பின்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் கணவர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட மறுபக்கம் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வந்துள்ளார் நடிகை மீனா.
இதனை தொடர்ந்து கணவர் விருப்பத்துக்கு எதிராக மனைவி மீனா நடந்து கொண்டது தான் அவருடைய கணவர் வித்யாசாகரை கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், புறா எச்சத்தால் ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும் என்பதெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என மீனா கணவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.