கடந்த சில நாட்களாகவே நடிகர் சிம்புவை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நடிகை ஸ்ரீநிதி என்பவரை பலரும் அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் தான் இப்படி பேசி வருகிறார் என குற்றம் சாட்டி வந்தனர்.
அதற்கு ஏற்றது போலவே அவரும் சம்மந்த இல்லாத நம்பக தன்மையற்ற சர்ச்சை பேச்சுக்களையே பேசி வந்தார்.
அதே போல கடந்த சில வாரங்களாக தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இனி தான் சீரியலில் நடிக்கப்போவது இல்லை என்றும் தனக்கு ஒரு பிரேக் இல்லை வேண்டும் கூறி இருந்தார் ஸ்ரீநிதி.
இந்நிலையில், சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் ஸ்ரீநிதியைக் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளதாக அவருக்கு நெருக்கமான நட்பு வட்டத்தினர் தெரிவிக்கின்றனர்.