உலக யானைகள் தினத்தையொட்டி யானைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.
ஆசிய யானைகளில் 60 சதவிகிதம் இந்தியாவில்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விலங்குகள் பாதுகாப்பில் உள்ள வெற்றிகளை, மனித-விலங்கு மோதலைக் குறைப்பதற்கும், உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைத்து, சுற்றுச்சூழல் உணர்வை மேம்படுத்துவதில் அவர்களின் பாரம்பரிய ஞானத்தை ஒருங்கிணைப்பதற்கும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய முயற்சிகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும், என்றார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உலக யானைகள் தினத்தில், யானைகளைப் பாதுகாப்பதில் எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் யானைகளை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன்’’ என்றார்.