Tuesday, April 30, 2024 7:54 am

அஜித் ரசிகர்களை டென்ஷன் ஆக்கிய கூல் சுரேஷ் !! நடந்து என்ன ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தென்னிந்தியாவின் முக்கியமான மற்றும் வெற்றிகரமான ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர். கே.வி.அனுதீப் இயக்கத்தில் நடிகரின் வரவிருக்கும் படம் ‘பிரின்ஸ்’ இது தமிழ் – தெலுங்கு இருமொழிப் படமாக நாளை அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்கு அறிமுகமான படம் ‘பிரின்ஸ்’.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.பிரின்ஸ் படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த கூல் சுரேஷ், சிவகார்த்திகேயன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பற்றி கூல் சுரேஷ் பேசிய இந்த வீடியோ இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. சிவாவுடன் சத்யராஜ், மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. பலரும் இது சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் செகண்ட் பார்ட் போல இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ கலக்கப்போவது யாரு ரியாலிட்டி ஷோ மாதிரி இருக்கு என விமர்சனம் செய்துள்ளனர். டாக்டர், டான் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு, பிரின்ஸ் திருஷ்டிப் பொட்டாக மாறிவிட்டது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை, நடிகர் கூல் சுரேஷ் திரையரங்கில் சென்று பார்த்துள்ளார். அதன்பின்னர் வழக்கம் போல வெளியே வந்து பிரின்ஸ் படம் குறித்தும் சிவகார்த்திகேயன் பற்றியும் தாறுமாறாக புகழ்ந்து பேசினார். அப்போது திடீரென எமோஷனல் ஆன கூல் சுரேஷ், சினிமா பைனான்சியரும் தயாரிப்பாளருமான அன்புச் செழியன் சிவகார்த்திகேயன் பற்றி பேசியதை குறிப்பிட்டார். அதாவது ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் மாஸ் என பிரின்ஸ் ஆடியோ வெளியிட்டு விழாவில் அன்புச் செழியன் பேசியிருந்தார்.

அதனை குறிப்பிட்ட கூல் சுரேஷ், “மிஸ்டர் அன்புச் செழியன் சார்… எப்படி சார் அப்படி சொன்னீங்க” என கதறியதோடு, “நீங்க சொன்னது உண்மை தான் சார், என் மச்சான் சிவகார்த்திகேயன் தான் மாஸ்… ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் மாஸ்…. என் மச்சான் சிவகார்த்திகேயன் செம்ம மாஸா இருக்கார்…. அன்புச் செழியன் சார் நீங்க சொன்ன வாக்கு பலித்து விட்டது” என உற்சாகத்தில் கூக்குரலிட்டார். இதனைக் கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்களும் கூல் சுரேஷை இன்னும் உசுப்பேத்திவிட்டனர்.

தமிழ் சினிமாவில் எப்போதுமே இருதுருவங்களில் இரண்டு ஹீரோக்கள் முன்னணியில் இருப்பது வழக்கம். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என தொடரும் இந்த யுத்தம், இப்போது விஜய் – அஜித், அடுத்து சிம்பு – தனுஷ் என வரிசை கட்டி நிற்கிறது. இந்நிலையில், ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் மாஸ் என கூல் சுரேஷ் பேசியது, அஜித், சிம்பு, தனுஷ் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சென்ற மாதம் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு ப்ரோமோஷன் செய்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் இருந்து ஐபோனை தட்டித் தூக்கினார். இந்த மாதம் சிவகார்த்திகேயனையும் அன்புச் செழியனையும் கூல் சுரேஷ் டார்க்கெட் செய்துவிட்டார் போல.

இருந்தும் எந்த ஒரு மிரட்டலுக்கும் பயப்படாமல் தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பித் தருகிறேன், ஆனால் நான் கடவுள் படத்தில் என்னால் நடிக்க முடியாது என்ற அஜித் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அஜித்தை அவமானப்படுத்தும் விதத்தில் அன்புசெழியன் நடந்து கொண்டுள்ளார், இருந்தும் அஜித் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அன்புசெழியன் பேசுகையில் எம்ஜிஆர், ரஜினி, விஜய் ஆகியோர் வரிசையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் இருக்கிறார் என தெரிவித்து, அஜித் பெயரை குறிப்பிடாமல் திட்டமிட்டு புறக்கணித்துள்ளார் அன்புசெழியன், இன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆர் அளவுக்கு செல்வாக்கு மிக்க நடிகராக அஜித் வலம் வந்து கொண்டிருக்கார்.

அப்படி இருக்கையில், அஜித் பெயரை மேடையில் குறிப்பிடாமல் அன்புச் செல்வன் புறக்கணித்ததற்கு முக்கிய காரணம் நான் கடவுள் படத்தில் நடந்த பழைய பஞ்சாயத்து தான் என்று கூறப்படுகிறது . மேலும் தற்போது ரஜினி, விஜய் அடுத்ததாக மூன்றாவது நடிகராக சிவகார்த்திகேயன் இருப்பது போன்ற ஒரு கட்டமைப்பு சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இதனால் தொடர்ந்து பல நிகழ்வுகளில் அஜித் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வரப்படுகிறார். இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியனும் பேசுகையில் சிவகார்த்திகேயனை மூன்றாவது நடிகர் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கும் வகையில் பேசியிருந்தார். அதேபோன்று பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் பேசுகையில், ரஜினி விஜய் அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல தனியார் தொலைக்காட்சிகள் சிவகார்த்திகேயனை ஒரு மூன்றாவது நடிகராக கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் அஜித்தை யார் இருட்டடிப்பு செய்தாலும் அவருக்கான ரசிகர் பட்டாளம் அவர் பின்னால் இருந்து வருவதால் அஜித் என்ற நடிகரை எந்த ஒரு கட்டமைப்பு தகர்த்து விட முடியாது, புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்ட கதையாக தான் சிவகார்த்திகேயன் நிலைமை என்கின்றனர் சினிமா துறையினர்.

ஸ்டாண்ட்-அப் காமெடியனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் தனது நகைச்சுவையான ஒன்-லைனர்களால் பிரபலமடைந்தார். இன்று, அவர் தமிழ் துறையில் ஒரு வங்கி நட்சத்திரமாக இருக்கிறார், அவர் தனது கைக்குள் பல வெற்றி படங்களை வைத்திருக்கிறார். ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவைக்கு பெயர் பெற்ற தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அனுதீப்புடன் சிவகார்த்திகேயன் போன்ற ஒரு நட்சத்திரம் கைகோர்த்தால், திரையில் பட்டாசு வெடிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்