Tuesday, April 30, 2024 9:53 am

2023 உலககோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா வெற்றி தொகையாக எவ்வளவு ? – மற்ற அணிகளுக்கான பரிசுத் தொகை விபரம்.

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியா நடத்தும் உலகக் கோப்பையின் (உலகக் கோப்பை 2023) இறுதிப் போட்டி நவம்பர் 19 அன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா (IND vs AUS) இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது.

இதற்கு பதிலடியாக ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. அதே சமயம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேரிட்ட இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு மூன்று பெரிய காரணங்களைப் பற்றி இன்று பேசுவோம். இறுதிப் போட்டியில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் மைதானத்தில் போட்டியை கண்டு ரசித்தனர்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, ரன்னர் பட்டம் பெற்ற இந்தியா உள்ளிட்ட 10 அணிகளுக்கு பரிசுத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி 240 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதனை எளிதாக சேஸிங் செய்த ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதையடுத்து வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையும், வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதேபோன்று ரன்னர் டைட்டில் பெற்ற இந்திய அணி வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 33 கோடி ஆகும்.

இதேபோன்று ரன்னர் பட்டம் பெற்றுள்ள இந்திய அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 16 கோடி) பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6.50 கோடி பரிசுத் தொகையும், லீக் சுற்றுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ. 83 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளன. முன்னதாக 2003 இல் ரிக்கி பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஜோகன்ஸ் பெர்க் நகரில் நடந்த இறுதிப் போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இந்நிலையில், இன்று நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது இந்திய அணியின் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 765 ரன்கள் குவித்துள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா 2023 உலகக் கோப்பையில் அபாரமாக பேட்டிங் செய்து 11 போட்டிகளில் 54 சராசரியில் 597 ரன்கள் எடுத்தார். ஆனால் உலகக் கோப்பையில் பல போட்டிகளில் ரோகித் சர்மா மோசமான ஷாட்களை ஆடியும் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி பல சிரமங்களை சந்திக்க நேரிட்டது.

அதேநேரம், இறுதிப் போட்டியிலும் ரோஹித் சர்மா 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால் மோசமான ஷாட் ஆடி விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி கடும் நெருக்கடிக்கு உள்ளானதால் அந்த அணியால் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்