திருப்பூர் சுப்ரமணியம் திரையரங்கம், அரசு விதிகளை மீறி, முறையான அனுமதியின்றி, ‘டைகர் 3’ படத்துக்கு சிறப்பு காலை காட்சிகள் நடத்தியதாக, தமிழக அரசு, நோட்டீஸ் அனுப்பியது.தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
திருப்பூர் சுப்ரமணியம் திரையரங்கம், அரசு விதிகளை மீறி, முறையான அனுமதியின்றி, ‘டைகர் 3’ படத்துக்கு சிறப்பு காலை காட்சிகள் நடத்தியதாக, தமிழக அரசு, நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், திருப்பூர் சுப்பிரமணியம், திருப்பூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.
அதற்கான காரணத்தை விளக்கிய அவர், “சிறப்பு காட்சிகள் குறித்த தமிழக அரசின் விதிமுறைகள் இந்தி படங்களுக்கு பொருந்தாது என நினைத்து எங்கள் திரையரங்குகள் தீபாவளி அன்று காலை சிறப்பு காட்சியை திரையிட்டன.நானும் ஒரு மனிதன் தான், 100 சதவீதம் முழுமையாய் இருக்க முடியாது. 10 சதவீத பிழை கண்டிப்பாக நடக்கும். நல்ல பெயருடன் வெளியே செல்ல முடிவு செய்து, ராஜினாமா செய்யும் முடிவை அறிவிக்கிறேன். இதுபோன்ற மிகைப்படுத்தல்களால் நான் வேதனையடைந்தேன், எனவே நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
‘ஜப்பான்’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ படங்களுக்கான சிறப்பு காட்சிகள் குறித்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்திப் படத்துக்குக் குறிப்பிடப்படவில்லை. அதனால்தான் திரையிட்டார்கள். இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். அதனால், இந்தப் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்,” என்றார்.
- Advertisement -
- Advertisement -