கார்த்திக் சுப்புராஜின் ஹிட் ஆக்ஷன் காமெடி படமான ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் இந்த தீபாவளி சீசனில் வெளிவரத் தயாராகி வருகிறது. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸின் கீழ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்தில் சந்திரமுகி 2 இல் கடைசியாக நடித்த ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, ரெஜினா ஆகியோர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் விடாமுயற்சி. இந்தப் படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் அஜர்பைஜானிலேயே நடத்தப்போவதாக படக்குழு முடிவெடுத்திருக்கிறார்கள். பக்கா ஆக்ஷன் படமாக ஹாலிவுட் தரத்தில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்தப் படத்தில் இணைகிறார் அஜித். இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம் மார்க் ஆண்டனி.
இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஜிகர்தண்டா 2 படத்தில் லாரன்ஸுடன் நடித்திருக்கிறார், அந்தப் படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகத்தான் நடித்திருக்கிறார். அவர் நடிக்கும் படங்களில் அவர் வில்லனாக தெரியாமல் மற்றுமொரு ஹீரோவாகத்தான் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.
அந்தளவுக்கு ஹீரோவுக்கு இணையான க்ரேஸ் உள்ள நடிகராக எஸ்.ஜே.சூர்யா திகழ்கிறார். ஏற்கனவே மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பார். அடுத்ததாக அஜித்துக்கும் பவனுக்கும் வில்லனாக நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அஜித்தின் அடுத்தப் படத்தினை இயக்குவதே ஆதிக்தான்.எஸ்.ஜே.சூர்யா ஆசையை நிறைவேற்றாமல் போய்விடுவாரா என்ன? மார்க் ஆண்டனி படத்தில் இருந்தே ஆதிக்கிற்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே ஒரு நல்ல பாண்டிங் இருந்தது.
இந்த ஒரு பேட்டி போதாதா? அஜித்துக்கு கூடிய சீக்கிரம் வில்லனாக அவதாரம் எடுப்பார் எஸ்.ஜே.சூர்யா என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.படத்தின் பாடல்களுக்கு ஷெரீப் எம், பாபா பாஸ்கர் நடனம் அமைத்துள்ளனர், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குநராக உள்ளார். டி சந்தானம் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஷபீக் முகமது அலி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் நாராயணன் எம் நிர்வாக தயாரிப்பாளர். கல் ராமன், எஸ் சோமசேகர், கல்யாண் சுப்ரமணியம், அலங்கார் பாண்டியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்கள். குணால் ராஜன் ஒலி வடிவமைப்பாளர்.