Sunday, April 28, 2024 11:37 pm

சும்மாவா சொன்னாங்க ULTIMATE ⭐️ ன்னு இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித்தின் புதிய லூக் ! வைராலோ வைரல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2023 இல் இயக்குனர் எச்.வினோத்தின் ‘துணிவு’ படத்தின் மூலம் அஜித் குமார் வெற்றி பெற்றார். நடிகர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து ஒரு படம் செய்யவிருந்தார். இருப்பினும், படைப்பு வேறுபாடுகளால் படம் தோல்வியடைந்தது. பின்னர், தயாரிப்பாளர்கள் மகிழ் திருமேனியை இயக்குநராக ஒப்பந்தம் செய்தனர்.

நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஜித். அவரது 62ஆவது படமாக இது உருவாகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப் படத்திலிருந்து அவர் விலகிவிட அடுத்ததாக மகிழ் திருமேனி உள்ளே வந்தார். மகிழ் திருமேனியும் அட்டகாசமான இயக்குநர் என்பதால் துணிவு படம் போலவே விடாமுயற்சியும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

பைக் டூர்: படம் குறித்த அப்டேட் கடைசியாக மே 1ஆம் தேதி வெளியானது. அதோடு சரி அதற்கு பிறகு அஜித் டூர் செல்லும் அப்டேட்டுகள்தான் வெளியாகின. இதனால் வலிமை பட அப்டேட்டுக்கு எப்படி காத்திருந்தனரோ ரசிகர்கள் அதேபோல் காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அஜித்தோ பைக்கை எடுத்துக்கொண்டு உலக நாடுகளில் ஜாலியாக சுற்ற ஆரம்பித்தார்.

விடாமுயற்சி ஷூட்டிங்: இதனையடுத்து லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன் காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போயிருப்பதாக கூறப்பட்டது. மேலும் மகிழ் திருமேனியும் திரைக்கதையை செதுக்கிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அந்த கேப்பை பயன்படுத்தி வளைகுடா நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்தார்.

ஷூட்டிங் ஆரம்பித்தது: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் நாட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்துவிட்டு துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங் நடத்தவும் மகிழ் திருமேனி திட்டமிட்டிருக்கிறாராம்.

மிலன் மரணம்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த படக்குழுவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவருக்கு பதிலாக அவரது மகன் கலை இயக்கத்தை கவனிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத் மட்டும் வில்லனாக நடிக்க வில்லை மேலும் ஒரு வில்லன் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.அவர் யாரென்று பார்த்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ் தான் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது அவரும் ஒரு வில்லன் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது.அர்ஜுன் தாஸ் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தான் தற்போது ஆரவ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…ஏற்கனவே மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த கலகத்தலைவன் படத்தில் ஆரவ் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் தான் இபபடத்திலும் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது செம்ம வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

அஜித்குமார் மூத்த குடிமகன் மற்றும் இளையவர் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். உற்சாகத்தைச் சேர்த்து, ரெஜினா கசாண்ட்ரா திரைப்படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் இருப்பதாக வதந்தி பரவுகிறது, இருப்பினும் இந்த ஊகங்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

கூடுதலாக, இந்த பிரமாண்ட திட்டத்தில் த்ரிஷா ஒரு பெண் கதாநாயகியாக நடித்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது, மேலும் இதனை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் ஏற்றுள்ளார். மேலும் புதுப்பிப்புகளுக்கு ஒரு கண் வைத்திருங்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்