Monday, April 29, 2024 1:22 am

சிவகார்த்திகேயன் இமான் விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய ஆடியோ வைரல் ! SK-வா இப்படி ? ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டி இமான் சிவகார்த்திகேயன் மீது ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார், மேலும் அவர் சர்ச்சையை ஒரு நபர் எழுப்பியதாகக் கூறினார். ஆனால் டி இமானின் முன்னாள் மனைவி மோனிக்கா, சிவகார்த்திகேயனுக்கு எதிராக இசையமைப்பாளரின் அறிக்கைக்காக அவரை விமர்சித்தார், மேலும் நடிகரின் தரப்பை தெளிவுபடுத்துகிறார். மோனிக்கா ரிச்சர்ட், டி இமானுக்கு வாய்ப்பு இல்லாததே அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.தமிழ் ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இசையமைப்பாளரிடம் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிவது குறித்தும், பல ஹிட் பாடல்களை வழங்குவது குறித்தும் கேட்கப்பட்டபோது, இமான், சிவகார்த்திகேயனுடன் ஆரம்ப காலத்தில், மனம் கொடிப் பறவையின் போது பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.

“நாங்கள் இசையமைக்கும் வேலைகளில் இருந்தோம், அவருடைய முதல் படமான மெரினா இன்னும் எடிட்டிங் டேபிளில் இருந்தது. அவர் விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார், அவர் எவ்வளவு கடின உழைப்பாளி என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், அதனால்தான் அவர் இப்போது இருக்கிறார், ”என்று இசையமைப்பாளர் மேலும் கூறினார். இருவரும் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம விடு பிள்ளை உள்ளிட்ட ஐந்து படங்களில் பணியாற்றியுள்ளனர்.

இதன் பின்னால் பல்வேறு உள்ளடி வேலைகள் நடந்து வருகிறது என வலைப்பேச்சு பிரபலம் அந்தணன் அவர்கள் சில விஷயங்களை தன்னுடைய யூடியூப் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்திருக்கிறது. அவர் கூறியதாவது, சிவகார்த்திகேயன் இன்று சினிமாவில் எவ்வளவோ பெரிய உயரத்தில் இருக்கிறார்.

அவருடைய கண் அசைந்தால் போதும் அவருக்கு தேவையான அனைத்த்த்துமே கிடைக்கும். அப்படியான ஒரு இடத்தில் தான் அவர் தற்போது இருக்கிறார். அப்படி இருக்கும்போது ஒரு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஒருவர்.. தன்னுடைய படத்தின் இசையமைப்பாளரின் மனைவி.. அவரிடமா தன்னுடைய வேலையை காட்டுவது…?

ஒரு மனிதன், ஒரு ஆணை நம்பி நடு வீடு வரை அனுமதிக்கிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு தன் மீது நம்பிக்கை வைத்திருப்பார்.. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டாமா..? ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி நடந்து கொள்ளவில்லை.இந்த விஷயத்தை இமான் வெளியே கூறிய பிறகு சிவகார்த்திகேயன் இமானுக்கு போன் செய்து இந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.. கெஞ்சி இருக்கிறார்… நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்..? நேரில் வந்து காலில் கூட விழுகிறேன்.. என்னை இந்த பிரச்சினையில் சிக்க வைத்து விடாதீர்கள் என்று அழுது இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இந்த பேச்சை இமான் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய குடும்பத்தை கெடுத்துபோது உனக்கு நன்றாக இருந்ததா..? தற்போது உன்னுடைய வாழ்க்கை கெட்டுவிடும் என்றதும் பதறுற.. என்று பேசிவிட்டு ஃபோனை வைத்திருக்கிறார் இமான். இதற்க்கான ஆடியோ ஆதாரத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறார்.மறுபக்கம் சிவகார்த்திகேயன் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் சில சமூக வலைதள பக்கங்களிடம் பணம் கொடுத்து தனக்கு ஆதரவாக மீம்களை வெளியிட சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும் இந்த விஷயத்தில் இமானின் பேச்சை கிண்டலாகவும்.. பகடி செய்யும் விதமாகவும்.. மீம்களை பறக்க விட உத்தரவு போட்டிருக்கிறார்.. இதற்காக பெருமளவு தொகை கை மாறி இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும்.. இமானுக்கு எதிராகவும் அவருடைய பேச்சை ஒரு ஜோக்கர் பேச்சு என்பதை போல திரிவிக்கும் விதமாக மீம்களை உற்பத்தி செய்து இணையத்தில் பரவ விட இரவு பகலாக ஒரு கூட்டமே வேலை செய்து கொண்டிருக்கிறது.இதற்காக சிவகார்த்திகேயன் மிகப்பெரிய தொகையை செலவு செய்திருக்கிறார்.சிவகார்த்திகேயன் தன்மீது தவறு இருக்கிறது. என்று நினைத்தால் ஒரு கோயிலுக்கு சென்று.. கடவுளே.. நான் இந்த விஷயத்தை தெரியாமல் செய்துவிட்டேன். எப்படியாவது என்னை காப்பாற்று.. என்று மனம் வருந்தி கடவுளிடம் கேட்டால் கடவுளே அவருக்கு உதவி செய்வார்.

அதை விட்டு விட்டு ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவரை கிண்டல் செய்யும் விதமாக பதிவுகளை வெளியிட காசு கொடுத்து இந்த பிரச்சனையை கிளறி கொண்டே இருந்தால் கடவுளும் அவருக்கு உதவி செய்ய மாட்டார். மாறாக, இவருக்கு மிகப்பெரிய சிக்கல் வந்து நிற்கும்.

இதனை சிவகார்த்திகேயன் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று இந்த பிரச்சனைக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.. அல்ல, அமைதியாக கடக்க வேண்டும். ஏனென்றால், இந்த விஷயத்தை மூன்று மாதங்கள் நான்கு மாதங்கள் கழித்து யாரும் நினைவில் வைத்துக் கொண்டிருக்க போவதில்லை.. மீறி போனால் இவருடைய ஒரு படம் இரண்டு படம் வரும்போது சலசலப்பு ஏற்படும்.

அடுத்தடுத்த படங்களில் இந்த விவகாரம் மறந்து போய்விடும். அதனால் சிவகார்த்திகேயன் தன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அமைதியாக இருப்பது தான் சிறந்தது. அதை விடுத்து விட்டு இமான் மீது சேற்றை பூசும் வேலையில் இறங்கினால் இயற்கையாகவே சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கை அழிந்து போய்விடும் என கூறியிருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.2008 இல் மோனிக்கா ரிச்சர்டை மணந்த பிறகு, டி இம்மான் அவரை டிசம்பர் 2021 இல் விவாகரத்து செய்தார், மேலும் தம்பதியருக்கு வெரோனிகா டோரதி இமான் மற்றும் பிளெசிகா கேத்தி இமான் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மோனிக்காவிடமிருந்து விவாகரத்து பெற்ற 6 மாதங்களுக்குள், டி இமான் மே 2022 இல் மறைந்த கோலிவுட் கலை இயக்குனர் உபால்டின் மகள் அமேலியை மணந்தார்.இமான், எந்த விவரங்களையும் வெளியிடாமல், இந்த பிரச்சினையில் நடிகரை எதிர்கொண்டதாகவும், சிவகார்த்திகேயன் அளித்த பதிலை வெளியிட மறுத்துவிட்டதாகவும் கூறினார். “என் வாழ்க்கையில் நான் காயப்பட்டதற்கு அவரும் ஒரு காரணம். அவர் மட்டுமே காரணம் அல்ல, ஆனால் அவர்களில் அவரும் ஒருவர். நாங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தோம், இந்த குறிப்பிட்ட பிரச்சினை எனக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவு வேதனையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் இன்னும் பதிலளிக்கவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்