Sunday, April 28, 2024 5:03 am

இமான்னால் சிவகார்த்திகேயன் வீட்டில் வெடித்த பூகம்பம் ! தெரியாம செஞ்சுட்டேன் மன்னிச்சுடுங்க இமானிடம் சரண்டரான சிவகார்த்திகேயன் !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் டி.இம்மானிடம் மீண்டும் நடிகருடன் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, அது எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்று கூறினார்.

தமிழ் ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இசையமைப்பாளரிடம் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிவது குறித்தும், பல ஹிட் பாடல்களை வழங்குவது குறித்தும் கேட்கப்பட்டபோது, இமான், சிவகார்த்திகேயனுடன் ஆரம்ப காலத்தில், மனம் கொடிப் பறவையின் போது பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.

“நாங்கள் இசையமைக்கும் வேலைகளில் இருந்தோம், அவருடைய முதல் படமான மெரினா இன்னும் எடிட்டிங் டேபிளில் இருந்தது. அவர் விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார், அவர் எவ்வளவு கடின உழைப்பாளி என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம், அதனால்தான் அவர் இப்போது இருக்கிறார், ”என்று இசையமைப்பாளர் மேலும் கூறினார். இருவரும் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம விடு பிள்ளை உள்ளிட்ட ஐந்து படங்களில் பணியாற்றியுள்ளனர். “அனைத்து படங்களும் இசை ரீதியாகவும் வெற்றி பெற்றன, உண்மையில் அது வருடபடாத வாலிபர் சங்கத்தில் தான், அவர் தனது முதல் பாடலைப் பாடினார். அவர் ஒரு அற்புதமான திறமைசாலி. ”

இசையமைப்பாளர் டி இமான் கடந்த 2008ம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிக்கா ரிச்சர்ட்டை திருமணம் செய்தார் இமான். இவர்களின் 13 ஆண்டு திருமண வாழ்க்கை கடந்த 2020ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், விவாகரத்துக்கு காரணம் என்ன என்கிற குழப்பம் இதுவரை நீடித்து வந்த நிலையில், சமீபத்திய சிவகார்த்திகேயன் குறித்து டி இமானின் பேட்டி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் தனக்கு மிக பெரிய துரோகத்தை செய்து விட்டதாக தெரிவித்த டி இமான், குழந்தைகள் பாதிக்க கூடாது என்பதால் இதற்கு மேல் பேச முடியாது என உருக்கமாக இமான் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, இமான் குடும்பத்தை சிவகார்திகேயன் உள்ளே புகுந்து நாசம் செய்து விட்டார் என மிக கடுமையாக பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து இமான் பேசிய இன்டர்வியூ வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானால், தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும் என்பதால் உடனே சிவகார்த்திகேயனுக்கு என சமூக வலைதளங்களில் ஐடி விங்காக செயல்படும் குழுவினரிடம் இமான் தன்னை பற்றி பேசியுள்ள அந்த இன்டர்வியூ வீடியோ வைரலாக கூடாது எதாவது பண்ணுங்க என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

உடனே சிவகார்த்திகேயனின் ஐடி விங் களத்தில் இறங்கி, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக என்னெல்லாம் செய்ய முடியுமா அத்தனையையும் செய்தவர்கள், ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனை விமர்சனம் செய்கின்றவர்களிடம் சமூக வலைதளத்தில் சண்டையிட்டு வந்துள்ளார்கள், இந்நிலையில் வீடியோ வைரலாகி விவகாரம் பெரிதாவதை உணர்ந்த சிவகார்த்திகேயன் உடனே நிலைமை மோசவதற்குள் டி இமான் காலில் விழுந்து விட வேண்டியது தான் என்கிற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

டி இமான் இன்டெர்வியூ வீடியோ வெளியான அன்று இரவே டி இமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சிவகார்த்திகேயன். அண்ணா நான் செய்த தவறுக்கு மன்னித்து விடுங்கள் என்று சிவகார்த்திகேயன் கெஞ்சியதாகவும், மேலும் தன்னை பற்றி நீங்கள் பேசிய இன்டர்வியூ வீடியோவை சம்பந்தப்பட்ட அந்த youtube சேனலை தொடர்பு கொண்டு உடனே டெலிட் பண்ண சொல்லுங்க அண்ணா என தெரிவித்த சிவகார்த்திகேயன்.

இந்த விபரம் வெளியில் வைரலால் ஆவது என்னுடைய இமேஜ் மிகப்பெரிய அளவில் டேமேஜ் ஆகும், மேலும் என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய சகோதரிக்கு, இந்த விஷயம் தெரிந்தால் என்னுடைய மானம் கப்பலேறிவிடும் அண்ண, தயவு செய்து அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட யூடியூப் நிறுவனத்திடம் தெரிவித்து டெலிட் செய்து விடுங்கள் என இமானிடம் சிவகார்த்திகேயன் கெஞ்சியதாக கூறப்படுகிறது.

ஆனால் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட மனம் இறங்காத டி இமான் என்னுடைய குடும்பம் மற்றும் நான் பாதிக்கப்பட்டதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியவில்லையா.? இப்போது உனக்கு பிரச்சனை என்றதும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படி பேசுகிறாய்.? எந்த ஒரு காரணத்துக்காகவும் அந்த இன்டர்வியூ வீடியோவை நான் அந்த youtube சேனலிடம் டெலிட் பண்ண சொல்ல மாட்டேன் என்று இமான் உறுதியாக சிவகார்த்திகேயனிடம் தெரிவித்தாகவும்.

இருந்து விடாத சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் அண்ணா நீங்க எங்கே இருக்கீங்க என்று சொல்லுங்கள், நான் உடனே நான் அங்கே வந்து உங்கள் காலில் விழுந்து கூட நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சிவகார்த்திகேயன் எவ்வளவோ டி இமானிடம் கெஞ்சியதாகவும், ஆனால் நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் நீ செய்த தவறுக்கு போய் கடவுளிடம் மன்னிப்பு கேள் என்று இமான் வேதனையுடன் சிவகார்த்திகேயனுடன் தெரிவித்ததாக பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இருப்பினும், அவர்களுக்கிடையே என்ன பிரச்சனை, ஏன் அவர்கள் ஒன்றாக வேலை செய்யவில்லை என்று இமானிடம் கேட்டபோது, ​​”இது கடினம் என்று நான் நினைக்கிறேன், இந்த பிறவியில் நாங்கள் ஒன்றாக வேலை செய்ய மாட்டோம். தனிப்பட்ட காரணங்களால், அவர் எனக்கு மறக்க முடியாத துரோகத்தை இழைத்துவிட்டார். இது தனிப்பட்டது, என்னால் அதை வெளிப்படுத்த முடியாது. இனிமேல் ஒன்றாக வேலை செய்ய முடியாது என்று நான் நினைக்கவில்லை, அவருடைய படங்களுக்கு நான் வேலை செய்ய மாட்டேன்.

இமான், எந்த விவரங்களையும் வெளியிடாமல், இந்த பிரச்சினையில் நடிகரை எதிர்கொண்டதாகவும், சிவகார்த்திகேயன் அளித்த பதிலை வெளியிட மறுத்துவிட்டதாகவும் கூறினார். “என் வாழ்க்கையில் நான் காயப்பட்டதற்கு அவரும் ஒரு காரணம். அவர் மட்டுமே காரணம் அல்ல, ஆனால் அவர்களில் அவரும் ஒருவர். நாங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தோம், இந்த குறிப்பிட்ட பிரச்சினை எனக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவு வேதனையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் இன்னும் பதிலளிக்கவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்