Saturday, April 27, 2024 8:17 pm

இனிக்க இனிக்க பேசி சொந்த தம்பி போல் உதவியவருக்கே முதுகில் குத்திய சிவா!டி இமான் விவாகரத்துக்கு காரணம் இவரா?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் பணியாற்றிய டி இம்மானிடம் மீண்டும் நடிகருடன் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, அது எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்று கூறினார்.

தமிழ் ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இசையமைப்பாளரிடம் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிவது குறித்தும், பல ஹிட் பாடல்களை வழங்குவது குறித்தும் கேட்கப்பட்டபோது, இமான், சிவகார்த்திகேயனுடன் ஆரம்ப காலத்தில், மனம் கொடிப் பறவையின் போது பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பது நடக்காது என்றும் இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கான அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது’ இவ்வாறு டி.இமான் கூறியுள்ளார்.

2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஊதாக் கலரு ரிப்பன்’ உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகின. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு டி,இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றனர். ‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் – டி.இமான் கூட்டணி மீண்டும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.குழந்தைகளுக்காக மூடி மறைக்கிறேன்: இனிக்க இனிக்க பேசி கழுத்தறுத்த அவருடன் எனக்கு எந்த உறவும் கிடையாது என்று ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார். மேலும் அது எந்த மாதிரியான துரோகம் என்பதை வெளியில் கூற முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இதை மூடி மறைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதிலிருந்து சிவகார்த்திகேயன் மிகப்பெரும் துரோகத்தை செய்துவிட்டார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

அது மட்டுமின்றி இதுவே இமான் விவாகரத்துக்கு காரணமாகவும் இருந்திருக்கிறது. இது பற்றி சிவகார்த்திகேயனிடம் அவர் கேட்ட போது அவர் சொன்ன பதிலையும் இமான் கூற மறுத்துவிட்டார். அது பண விஷயம் அல்லது உறவை தாண்டிய விஷயமாகவும் இருக்கலாம். மேலும் கோலிவுட் வட்டாரத்தில் இந்த விஷயம் பலருக்கும் தெரிந்திருக்கிறது. இருப்பினும் இதுவரை எந்த வெளிப்படையான தகவல்களும் வெளிவரவில்லை.

தற்போது இமான் ஆதங்கத்தோடு வெட்ட வெளிச்சமாக்கி இருக்கும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வீடியோவை மிக வேகமாக ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து வருகின்றனர். அது மட்டுமின்றி அவருக்கு எதிராக சில எதிர்ப்பலைகளும் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.விவாகரத்துக்கு SK தான் காரணமா?

இனி அவருடன் இந்த ஜென்மத்தில் படங்களில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அவரது துரோகத்தை தாமதமாக தான் புரிந்து கொண்டேன். என் குழந்தைகளை இந்த விஷயங்கள் பாதிக்கும் அதனால் நான் இதுகுறித்து எதுவும் பேசவில்லை என பட்டும் படாமல் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து டி.இமான் தனது மனைவியை பிரிய சிவகார்த்திகேயன் தான் காரணமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்து ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இமான் தான் இசையமைத்துள்ளார். இவர்கள் காம்பினேஷனுக்கு நல்ல ரீச் இருந்தது. ஆனால் அதன்பிறகு இந்த கூட்டணி கட் ஆனது. அதற்கு காரணம் தெரியாமல் இருந்த பலருக்கும் தற்போது டி.இமான் பதில் அளித்துள்ளார். மறக்க முடியாத, மன்னிக்க முடியாத துரோகத்தை டி.இமானுக்கு SK செய்துள்ளார். அது என்ன துரோகம் என்பது குறித்து சோஷியல் மீடியாவில் ஒரு பட்டிமன்றமே நடந்து வருகிறது. இதற்கு சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

இமான், எந்த விவரங்களையும் வெளியிடாமல், இந்த பிரச்சினையில் நடிகரை எதிர்கொண்டதாகவும், சிவகார்த்திகேயன் அளித்த பதிலை வெளியிட மறுத்துவிட்டதாகவும் கூறினார். “என் வாழ்க்கையில் நான் காயப்பட்டதற்கு அவரும் ஒரு காரணம். அவர் மட்டுமே காரணம் அல்ல, ஆனால் அவர்களில் அவரும் ஒருவர். நாங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தோம், இந்த குறிப்பிட்ட பிரச்சினை எனக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவு வேதனையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் இன்னும் பதிலளிக்கவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்