Saturday, April 27, 2024 9:55 pm

இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயன் உடன் சேர மாட்டேன்! சிவகார்த்திகேயன் செய்த துரோகம் டி.இமான் கூறிய அதிர்ச்சி உண்மை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் இசையமைப்பாளர் டி இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கடந்த காலங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், இருவருக்கும் இடையில் எல்லாம் சரியாக இல்லை. சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர்களுக்கிடையேயான விரிசலை நிவர்த்தி செய்த இமான், இந்த வாழ்நாளில் சிவகார்த்திகேயனுடன் ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என்று கூறினார். பிரச்சினை என்ன என்பதை விளக்காமல், சிவகார்த்திகேயன் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் தனக்கு துரோகம் செய்ததாக இமான் வெளிப்படுத்தினார்.

இசையமைப்பாளர் இமான் அவர்கள் தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் மீது தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது இணைய வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

இணைய பக்கங்கள் முழுதும் எங்கு திரும்பினாலும் லியோ படத்தின் ரிலீஸ் குறித்தான பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதையும் தாண்டி இந்த விவகாரம் வெளியில் வந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம்ம வீட்டு பிள்ளை, உள்ளிட்ட திரைப்படங்களுக்கு டி இமான் இசையமைத்து இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், தற்போது சிவகார்த்திகேயன் எந்த கூட்டணியும் சேராமல் இருக்கிறீர்களே..? இதற்கு என்ன காரணம் என்று டி இமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த இமான், சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அதை வெளியில் சொல்ல முடியாது. அவருடன் இனி இணைந்து பணியாற்றுவது என்பது இந்த ஜென்மத்தில் நடக்காது.

வேண்டுமென்றால் இன்னொரு ஜென்மம் இருந்து அதில் நான் இசையமைப்பாளராக இருந்து அவர் நடிகராக இருந்தால் நடக்கலாம்.இந்த ஜென்மத்தில் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து படத்தில் பணியாற்றவே மாட்டேன். என்னுடைய ஆதங்கத்தை அடங்க முடியவில்லை. எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகம் செய்தீர்கள்..? என்று அவரிடமே நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறேன்.

ஆனால் அதற்கு அவர் கொடுத்த பதிலை நான் வெளியே சொல்ல முடியாது. மிகப்பெரிய மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறார். மிகப்பெரிய துரோகத்தை செய்து இருக்கிறார். நான் மறக்கவே மாட்டேன்.

எனவே இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் சேர்ந்து படங்களில் பணியாற்றவே மாட்டேன் என காட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் டி இமான்.சிவகார்த்திகேயன் ஒரு நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், இறுதியில் தொலைக்காட்சியில் நுழைந்தார், அங்கு அவர் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கினார். பின்னர் சினிமாவில் அடியெடுத்து வைத்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் இமான் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து ‘மனம் கொத்தி பறவை’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய ஐந்து படங்களில் பணியாற்றியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்