Monday, April 29, 2024 7:03 pm

இந்த மாதிரி மட்டமான ரசிகர்களை வச்சுக்கொண்டு தான் விஜய் முதலமைச்சராக ஆசைப்படுகிறாரா? வெளுத்து வாங்கிய சவுக்கு சங்கர்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன், கார்த்தி, ஃபகத் பாசில் மற்றும் சூர்யாவுடன் தனது சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கிய பிறகு, திரைப்படத் துறையில் மிகவும் விரும்பப்பட்ட இயக்குநரானார். தளபதி விஜய் நடிக்கும் அவரது அடுத்த படமான ‘லியோ’ எல்.சி.யு-வின் ஒரு பகுதியாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் இமாலய ஹைப் உள்ளது.உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் கதாபாத்திரம் எல்சியூவில் நுழையும் போது லியோவில் குரல் கொடுப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. லோகி இன்று படம் வெளியாவதற்கு முன்னதாக நேர்காணல்களை வழங்கத் தொடங்கினார், மேலும் அவர் ஒரு உரையாடலில் இந்த சலசலப்பைப் பற்றி பேசினார். இன்னும் 10 நாட்களுக்குப் பிறகு உங்களுக்குத் தெரியும், திரையரங்குகளில் பார்வையாளர்கள் சரியாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பல விஷயங்களை மறைத்துவிட்டோம்.

நடிகர் விஜய் விரைவில் அரசியலில் கால் பாதிக்கவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. இதனால் அவரின் அரசியல் ஆசையை தீவிரப்படுத்தும் வகையில் ரசிகர்களும் அரசியல் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய்யை நாளைய முதல்வராக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து பல போஸ்டர்களை அடித்து வருகின்றனர். இவ்வாறாக அரசியல் சார் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகின்ற அதேநேரம், இவர் நடித்த ‘லியோ’ திரைப்படமும் வெகு விரைவில் ரிலீசாகவுள்ளது.இதனை முன்னிட்டு சமீபத்தில் லியோ ட்ரெய்லர் ரோகிணி தியேட்டரில் திரையிடப்பட்டது. ஆனால் ட்ரெய்லரில் விஜய் செய்த சாகசங்களை அவரது ரசிகர்கள் ரோகிணி தியேட்டரில் ரியலாகவே செய்துமுடித்தனர். இதனால் ரோகிணி தியேட்டர் போர்க்களம் போல மாறியதோடு, 400 இருக்கைகள் சேதமாகியதோடு, மொத்தமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோகிணி தியேட்டருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆனது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். அந்தவகையில் சவுக்கு சங்கரும் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது “ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் நடந்துகொண்டவிதம் மிக மோசமான செயல், இந்த பசங்களை வச்சிக்கிட்டுதான் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகணும்ன்னு ஆசைப்படுகிறாரா, தியேட்டரில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரியாத இதுபோன்ற ரசிகர்களை வைத்துக்கொண்டு விஜய் முதலமைச்சர் கனவு காண்பது வேடிக்கையாக இருக்கிறது” எனவும் தாறுமாறாக விளாசித் தள்ளியுள்ளார் சவுக்கு சங்கர்.

லியோவுக்கு கமல்ஹாசன் டப்பிங் பேசியதாகவும், அவரது கதாபாத்திரம் லியோவை LCU க்குள் அழைத்துச் செல்லும் என்றும் உங்களுக்கு முதலில் தெரிவித்தது. LCU இல் லியோவின் சேர்க்கை படம் வெளியாகும் போது மட்டுமே திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லியோவில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள லியோ அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளித்திரைக்கு வருகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்