பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசிய பாடகி சின்மயி ஸ்ரீபாதா, சமீபத்தில் தனது ட்வீட் மூலம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போட்ட பதிவு ரசிகர்களை பெரும் குழப்பில் ஆழ்த்தியது. அத்தோடு தொடர்ந்தும் வைரமுத்து மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த சின்மயி சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். பல சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருவதோடு இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ளார்.
இந்நிலையில் சின்மயி தற்போது எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது இவர் நேற்று மாலை தன் இரட்டைக் குழந்தைகளுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் மதுபோதையில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சின்மயியின் காரில் மோதியதாகவ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது “தற்போது தன் குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், இந்த விபத்து தொடர்பாக தான் காவல்துறைக்கு அறிவிக்கவில்லை எனவும் ” அவர் கூறியுள்ளார். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டாதீர்கள் எனவும் அப்பதிவின் மூலமாக அட்வைஸ் பண்ணியும் உள்ளார்.
A piss drunk auto driver rammed against our car so badly that the frontal left side was smashed, at Abhiramapuram around 4 PM today.
My kids were seated on the rear seat. And stepped out safe with our nanny. I didn’t realise the extent of damage from the photo as I returned…
— Chinmayi Sripaada (@Chinmayi) October 1, 2023
ஏ.ஆர்.ரஹ்மானின் சென்னை கச்சேரி மோசமான நிர்வாகத்திற்காக அழைக்கப்பட்டதையடுத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பெற்று வருகிறார். அவரும் ACTC நிகழ்வுகளும் மன்னிப்புக் கேட்டு பணத்தைத் திரும்பப் பெறுவதாக உறுதியளித்திருந்தாலும், பலர் தங்கள் பதில்களில் செவிடாக இருப்பதாக உணர்ந்தனர். மோசமான கூட்டத்தை கட்டுப்படுத்தியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பாடகரும் கடுமையாக சாடப்பட்டனர்.