விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் தற்கொலை தமிழ் சினிமா துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மேலும் 16 வயதான அவர் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சோகமான இழப்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
மீரா, விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவின் மூத்த மகளாக 2007 இல் பிறந்தார். மருத்துவத் தொழிலைத் தொடர ஆசைப்பட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.இவரின் இறுதிக் கிரியைகளும் குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளன.இருப்பினும் விஜய் ஆண்டனி மற்றும் அவரின் குடும்பத்தினர் இன்றுவரை மீளாத் துயரில் இருந்து வருகின்றனர். பலரும் தொடர்ந்து விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலினைத் தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது மகள் மீராவின் சமாதிக்கு அடிக்கடி சென்று வருவதாக ஒரு தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலை தொடருமானால் அவரின் மனநலம் பாதிக்கப்பட்டு விடும் என்பதற்காக பலரும் அவரின் மனதை மாற்ற முயற்சித்து வருகின்றனர். அத்தோடு சமீபத்தில் விஜய் ஆண்டனி மறுபடியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகரின் படம் செப்டம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, ஆனால் அவரது மகளின் இழப்பு காரணமாக அது அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை.