தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான செந்தில், ஒப்பற்ற நகைச்சுவை சூப்பர் ஸ்டார் கவுண்டமணியுடனான அவரது காம்போவுக்கு குறிப்பாக அறியப்பட்டவர். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், இன்றைய தலைமுறை நடிகர்களுடன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியினுடைய இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் முதன்முறையாக செந்தில் கலந்து கொண்டுள்ளார். இவருடன் இணைந்து இன்னும் பல நகைச்சுவை நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் பாடலினுடைய backround music ஒளிபரப்பப்பட்டு பாடலினைக் கண்டு பிடிக்குமாறு சொல்கின்றனர். அப்போது “ஊருவிட்டு ஊரு வந்து..” பாடல் டியூன் ஒலிக்க விடுகின்றது. செந்தில் அந்த பாடலினைக் கண்டு பிடித்து விடுகின்றார். அதுமட்டுமல்லாது தான் அந்தப் படத்தில் நடித்திருக்கேன் எனவும் கூறுகின்றார்.
மேலும் இவருடன் இணைந்து இந்த ஷோவில் இமான் அண்ணாச்சியும் கலந்து கொண்டுள்ளார். அதில் இமான் செந்திலிடம் “இப்போ சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்கா” எனக் கேட்கின்றார். அதற்கு செந்தில் “சத்தியமாக நான் வச்சுக்கல” என்கிறார். இதனைக் கேட்டதும் அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது.
இதோ அந்த சூப்பரான ப்ரோமோ வீடியோ..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் மற்றும் ஜீவிதா நடிக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்தில் செந்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி, பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாகவும், 35 ஆண்டுகளுக்குப் பிறகு செந்தில் மீண்டும் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.