பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்ரியாவின் கணவர் அரவிந்த் சேகர் திருமணமான ஒரு வருடத்தில் மாரடைப்பால் காலமானார். இந்த தகவலை கேட்டு தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அரவிந்த் சேகர் வெறும் 30 வயதாகும் அவர் ஒரு பாடி பில்டராக இருக்கிறார். திருமுருகன் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான நாதஸ்வரம் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்ரியா. இந்த சீரியலில் ஹீரோ கோபியின் 4 தங்கைகளில் ஒருவராக ஸ்ருதி நடித்துள்ளார். அதன் பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் நடித்தார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி மற்றும் அரவிந்த் சேகர் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை மணமக்களை வாழ்த்தினர். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அரவிந்த் சேகர், மிஸ்டர் தமிழ்நாடு 2022-ஐ வென்ற ஆண்களுக்கான உடற்கூறு விளையாட்டு வீரர் மற்றும் பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரவிந்த் சேகர் மாரடைப்பால் மிக இளம் வயதில் இறந்த செய்தியைக் கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உள்ளது.
Rest in peace #ArvindShekar 💔
Condolences to #ShrutiShanmugaPriya Sister pic.twitter.com/H93GSJ1x5q
— Kollywood Cinima (@KollywoodCinima) August 3, 2023