Monday, April 29, 2024 11:06 pm

கொஞ்சம் சீக்கிரமா படத்தை முடிங்க இல்லனா ஷாலினி-ய லவ் பன்னிடுவேன்.! அஜித் – ஷாலினி நிஜ காதல் கதை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித்குமார் மற்றும் மனைவி ஷாலினியின் கூட்டணி ஒரு விசித்திரக் கதைக்குக் குறைவில்லை. காதலுக்கு மரியதையில் 18 வயது ஷாலினியை ஒரு திரைப்பட தயாரிப்பாளர் பார்த்தார், மேலும் அவரை அஜித்துடன் நடிக்கும் 25வது படத்தில் நடிக்க விரும்பினார். இறுதியாக, நட்சத்திரக் காதலர்கள் 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் திரைப்படத்தின் செட்டில் சந்தித்தனர், அது தொடங்கியது.

இருவரும் ஏப்ரல் 24, 2000 அன்று தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அஜித் மற்றும் ஷாலினிக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஷாலினி நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு திருமணத்திற்குப் பிறகு வீட்டுப் பொறுப்பை ஏற்றார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி மிகப்பெரிய உச்சத்தில் இருப்பவர் தல அஜித். இவரும் பல தோல்விகளை சந்தித்து தற்போது முன்னணியில் இருக்கிறார்.

சினிமாவை பொறுத்தவரை பலர் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருவார்கள். அதாவது நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அப்படித்தான் தல அஜித் மற்றும் நடிகை ஷாலினி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பிறகு அவர்களது காதல் கதை எவ்வாறு நடந்தது என்பது வெளியாகியுள்ளது.

அஜித் ஷாலினி இருவரும் முதன் முதலில் ஒன்றாக சேர்ந்த திரைப்படம் அமர்க்களம். இந்த படத்தில் ஒரு காட்சியின்போது தல அஜித் கையில் வைத்திருந்த கத்தி ஷாலினி அவர்களின் கையை கிழித்து விட்டது.

இதனால் துடிதுடித்துப் போன அஜித் சற்று பதற்றத்துடனும் காணப்பட்டார். ஆனால் ஷாலினி சற்றும் எதிர்பாராத வகையில் பயமின்றி, அதெல்லாம் ஒன்னும் இல்ல விடுங்க என்று தைரியமாக கூறியுள்ளார்.

இந்த தைரியத்தில் விழுந்த அஜித் அடுத்த நாளே ஷாலினியிடம் காதலிப்பதை கூறினார். அப்போதும் அஜித் எதிர்பார்க்காத வகையில் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். இப்படி எதிர்பார்க்காத விஷயங்களை செய்து தல அஜித்தின் மனதில் இடம்பிடித்த ஷாலினி தற்போது தல ரசிகர்களால் பாசத்துடன் அண்ணி எனவும் அழைக்கப்படுகிறார்.

தல அஜித் மற்றும் ஷாலினி ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.கமல் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான நிறம் படத்தில் ஷாலினி நடித்திருந்தார். இப்படத்தை தமிழிலும் கமல் இயக்கியுள்ளார். அதாவது பிரசாந்த், ஷாலினி, கோவை சரளா மற்றும் பலர் நடிப்பில் வெளியான பிரியாத வரம் வேண்டும் என்ற படம்தான் அது.

அப்போது பிரியாத வரம் வேண்டும் படத்தின் சூட்டிங் மூன்று நாள் மட்டுமே மீதம் இருந்ததால் அஜித், ஷாலினி திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அப்போது பிரசாந்தின் கால்ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போயுள்ளது. அதன் பிறகும் ஒரு சில காரணங்களால் அந்த காட்சிகள் எடுக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

அதன்பிறகு ஷாலினி தயாரிப்பில் சங்கத்திடம் படத்தை சீக்கிரம் முடிக்கும்படி கூறியுள்ளார். அதன்பிறகு ஷாலினி அந்த காட்சிகளில் நடித்து முடித்தார். ஜனவரி மாதம் நடக்க இருந்த அஜித், ஷாலினி திருமணம் பிரியாத வரம் வேண்டும் படத்தினால் ஏப்ரல் மாதம் தான் நடந்தது.

இந்த விஷயத்தை இயக்குனர் பேரரசு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு ஷாலினி குடும்பம், குழந்தைகளை வளர்ப்பது என சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார். மேலும் அஜித்தின் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் ஷாலினி இருந்துள்ளார்.

இன்று, அஜீத் மற்றும் ஷாலினியின் 20வது திருமண நாளையொட்டி, அவர்கள் ஒன்றாகச் சேர்ந்த சில அழகான தருணங்களை இங்கே பார்க்கலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்