Thursday, May 2, 2024 11:41 pm

அருள்நிதி நடித்த ‘திருவின் குரல்’ படத்தின் முழு விமர்சனம் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிவில் இன்ஜினியர் அருள் நிதியின் தந்தை பாரதிராஜா விபத்தில் சிக்கினார். அருள்நிதியால் சரியாக பேசவோ கேட்கவோ முடியாது. பாரதிராஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வளாகத்திற்குள் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் லாபத்திற்காக சில கொலைகளை அரங்கேற்றுகின்றனர். அருள்நிதியின் மூத்த சகோதரியின் மகள் ஒரு விபத்து பற்றி அறிந்து, அவர்கள் அவளைக் கொல்ல முடிவு செய்கிறார்கள். அவள் காப்பாற்றப்பட்டாளா? பாரதிராஜா என்ன ஆனார்? பெரிய திரையில் பார்க்கவும்.

பாரதிராஜா அப்பா வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் தன் கதாபாத்திரத்தை உள்வாங்கச் செய்தாலும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் எளிதில் கடந்து செல்ல முடிகிறது. ஆத்மிகாவுக்கு வழக்கம் போல ஹீரோயின் வேடம் முக்கியமில்லை. அவரும் எந்த மாற்றமும் இல்லாமல் நடித்து வருகிறார். மக்கள் எப்போதும் அருள்நிதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது முந்தைய படங்களில் குறைந்த பட்சம் கதை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் இந்த படம் அனைத்து நம்பிக்கைகளையும் தகர்த்தது.

அன்பான அப்பா, அழகான முறைப்பெண், குடும்பம் என அனைத்தும் வாய்ந்த வாய் பேச முடியாத – காது கேட்காத, மிகவும் கோபக்கார இளைஞரான அருள்நிதி, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிய தன் அப்பா பாரதிராஜாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதிக்கிறார்.

ஆனால் அங்கு கொலை கும்பல் ஒன்றுடன் எதிர்பாராமல் பகைத்து சிக்கிக் கொள்ள, அவர்களிடமிருந்து தன் மொத்த குடும்பத்தையும் காப்பாற்ற அருள்நிதி எடுக்கும் மிக நீ…ண்ட போராட்டமே ‘திருவின் குரல்’.

அருள்நிதி – பாரதிராஜாபேச முடியாத, சரிவர காது கேளாத அதேசமயம் கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்தில் அருள்நிதி எப்போதும்போல் அநாயசமாக பொருந்திப் போகிறார். சுற்றி நடப்பவற்றை துல்லியமாக கவனிப்பது, அப்பாவுக்காக குடும்பத்துக்காக நாடி, நரம்பு துடிக்க போராடுவது, சண்டை என உடல்மொழி, பாவனைகளால் ஸ்கோர் செய்கிறார்.விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு துடிதுடிக்கும் அப்பா கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா பரிதாபத்தை வரவழைக்கிறார். படம் முழுக்க வந்தாலும் அவருக்கு ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை.

பிற நடிகர்கள்ஹீரோயின் ஆத்மிகா, கோலிவுட்டில் வந்துள்ள ஆயிரக்கணக்கான குடும்ப செண்டிமெண்ட் மசாலா படங்களில் வந்து கதாநாயகனுக்கு பக்கபலமாக இருக்கும் வழக்கமான ஹீரோயின்! கதைக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு சத்தமில்லாமல் செல்கிறார்.

மருத்துவமனைக்கு வரும் பெண்கள், நோயாளிகளிடம் ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளும் கொலைகார கும்பலாக நடிகர்கள் அஷ்ரஃப், சுரேஷ், சாந்தன், வினோத். இவர்களில் அஷ்ரஃப் தன் வில்லத்தனத்தால் திரையில் தோன்றும் இடங்களில் எல்லாம் அச்சுறுத்துகிறார்.குழந்தை ஷர்மி, சித்ரா, அருள்நிதியின் பாட்டியாக வரும் சுபைதா என அனைவரும் தங்கள் வேலையை சரியாக செய்துகொடுத்து விட்டு செல்கின்றனர்.

அரசு மருத்துவமனை கதைக்களம்கமர்ஷியல் படம் என்ற போதும், அரசு மருத்துவமனையில் நிகழ்த்தப்படும் அவலம், அங்கு பணிபுரியும் வேடத்தில் வலம் வந்து அத்துமீறும் கொலைகார கும்பல் என அத்தனை கற்பனையான கதை… பாதிக்கப்பட்ட மக்களைக் குறிவைத்து இவர்கள் இயங்கினாலும், ஆயிரக்கணக்கான மக்கள் தினம் வந்து செல்லும் மருத்துவமனையில் இப்படி ஒரு கும்பல் இயங்குவது, டாக்டர், நர்ஸ் என இவர்களுக்கு அனைவரும் பலிகடாவாவது, ஒத்துழைப்பது என அரசு மருத்துவமனை மீதான பொது மாயைகளை ஊதிப் பெருதாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

கொரோனா ஊரடங்கு பாதிப்புகள், பொருளாதார வீழ்ச்சியின் நடுவே அரசு மருத்துவமனைகளை மட்டுமே அணுக சக்தி உடைய நடுத்தர, ஏழை மக்கள் வாழும் நாட்டில், தேவையில்லாத பயத்தைக் கொடுக்கும் வகையில் படத்தின் கதை, பேருக்கு படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் காவல் துறை என லாஜிக் ஓட்டைகள்!அதேபோல் கதையின் அடிநாதமாக இருக்கும் அப்பா – மகன் சென்டிமெண்ட் எதிர்பார்த்த அளவு படத்தில் கடத்தப்படவில்லை. கதைக்குள் சீக்கிரமாகப் பயணித்து விறுவிறுவென்று சென்று விட்டாலும், அதன்பின் பரிதாபத்தை மட்டுமே வரவழைக்கும் நோக்கில் மருத்துவமனைக்குள்ளேயே சுழன்றடிக்கும் திரைக்கதை அயற்சியைத் தருகிறது.கதைக்குள் நம்மை ஒன்றவைக்கும் ஆனால் மிக நீண்ட முதல் பாதி, பொறுமை இழந்து மூச்சுமுட்ட வைக்கும் இரண்டாம் பாதி, வில்லன் கும்பலை ஒழித்துக்கட்டிய பின்னும் நீண்டு நெஞ்சைப் பிழியும் சோகம், இவற்றின் நடுவே மொத்த படத்தையும் அருள்நிதி தோளில் சுமந்து இறுதிவரை நம்மை கூட்டிச் சென்று கரையேற்றுகிறார்.

சாம். சி.எஸ் வழக்கம்போல் பாடல்களில் ஏமாற்றுகிறார். ஆங்காங்கே பின்னணி இசை கதைக்கு வலுசேர்க்கிறது மற்றும் போரடிக்கவும் வைக்கிறது.சண்டைக் காட்சிகள் படத்துக்கு வலு சேர்க்கின்றன. அருள்நிதி, பாரதிராஜா, வில்லனாகத் தோன்றும் அஷ்ரஃப் என நல்ல நடிகர்கள் இருந்தும் தவறான கதைக்களத்தால் தான் நினைத்ததை படத்தில் கொண்டு வர முடியாமல் திணறி இருக்கிறார் புதுமுக இயக்குநர் ஹரீஷ் பிரபு… அடுத்த படத்துக்கு வாழ்த்துகள்.

முதல் பாதியே எங்களின் பொறுமையை சோதித்தது. சரி, இரண்டாம் பாதியில் ப்ரெஷ்ஷாக இருப்பதைப் பார்த்தால், வில்லன்களை வேறு ரூபத்தில் காட்டுகிறோம் என்ற பெயரில் ஸ்லோமோஷன் ஷாட்டுகளால் கொன்று நம்மை மேலும் சித்திரவதை செய்கிறார்கள். வில்லன் கும்பலின் தலைவனாக அசரவ்வின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. சொல்லப்போனால், படத்தின் மற்ற எல்லா கதாபாத்திரங்களையும் விட அவர் அதிக கவனத்தை ஈர்த்தார். அதுதான் படத்தின் ஒரே பாசிட்டிவ்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்