கடைசியாக 2022 இல் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘AK 62’ படத்தை அஜித்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குனருக்குப் படம் மகிழ் திருமேனிக்குப் போனது. ப்ராஜெக்டில் தோல்வியைப் பற்றி ஒருபோதும் பேசாத விக்னேஷ், கடைசியாக ‘AK62’ படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தைப் பற்றித் தெரிவித்தார்.
ஒரு பிராந்திய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவன் தான் ஏமாற்றமடைந்ததாக ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு இயக்குனரும் சந்திக்க வேண்டிய தடை இது என்று அவர் கூறினார். மேலும் படத்தின் தயாரிப்பாளருக்கு ஸ்கிரிப்ட்டின் இரண்டாம் பாகம் பிடிக்கவில்லை என்றும், ஸ்கிரிப்டை மாற்றுவது கடினமாக இருந்ததால், அந்த வாய்ப்பை அவர் கைவிட நேரிட்டதாகவும் அவர் விளக்கினார். இந்த கதையால் அஜித் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.
அஜித் படத்தை இயக்க வேண்டும் என்று வெகு காலமாக ஆசைப்பட்டார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் அவரின் ஆசை இப்படியாகிவிட்டது. இருந்தாலும் மனதை தேற்றிக் கொண்டு தன் அடுத்த பட வேலையை துவங்கியிருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஏ.கே. 62 படம் பற்றி விக்னேஷ் சிவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,ஏ.கே. 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்தேன். அஜித் குமார் தரப்பு எந்த தவறும் செய்யவில்லை. ஸ்க்ரிப்ட்டின் இரண்டாம் பாதி தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. அந்த வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு சென்றதில் சந்தோஷமே என்றார்.
அன்பான இயக்குநரே உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. மகிழ்திருமேனியை வாழ்த்தியிருக்கிறீர்கள். யாரையும் குறை சொல்லாமல் இருக்கிறீர்கள். இந்த குணம் உங்களை எங்கோ கொண்டு செல்லப் போகிறது.
அஜித்தை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். ஒரு நாள் அஜித் சாரே போன் செய்து, நாம படம் பண்ணலாமா என்று கேட்பார் பாருங்கள். அதுவரை நம்பிக்கையுடன் இருக்கவும் என தெரிவித்துள்ளனர்.ஏ.கே.62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கவிருக்கிறார். இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. விக்னேஷ் சிவன் பற்றிய அறிவிப்பின்போது பயன்படுத்திய ஏ.கே. 62 என்கிற தலைப்பை மீண்டும் பயன்படுத்த விரும்பவில்லையாம்.
அதனால் நல்ல தலைப்புடன் அறிவிப்பு வெளியிட காத்திருக்கிறார்களாம். மார்ச் மாதமே அறிவிப்பு வரும் என்றார்கள். இந்நிலையில் ஏப்ரல் மாதம் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என லைகா நிறுவனம் தயாரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏ.கே. 62 படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கவிருக்கிறார். அஜித்தின் அப்பா அண்மையில் இறந்ததால் படப்பிடிப்பை துவங்க தாமதமாகும் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் தன்னால் பட வேலை பாதிக்கப்படக் கூடாது என்று கூறிவிட்டாராம் அஜித் குமார்.
மே மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. துணிவு படத்தை விட ஏ.கே. 62 படத்தில் ஆக்ஷன் தூக்கலாக இருக்க வேண்டும் என மகிழ்திருமேனியிடம் கூறியிருக்கிறாராம் அஜித்.எதிலும் அவசரப்பட வேண்டாம், நல்லபடியாக ஸ்க்ரிப்ட்டை எழுதவும் என தெரிவித்துள்ளாராம் அஜித். ஏ.கே. 62 பட வேலையை முடித்துவிட்டு தன் பைக்கில் உலக டூர் செல்ல திட்டமிட்டார். ஆனால் தற்போது அந்த திட்டத்தை தள்ளிப் போட்டுள்ளாராம்.அதே சமயம் படத்தின் திரைக்கதையை மகிழ் திருமேனி இன்னும் முழுவதுமாக எழுதி முடிக்கவில்லை என்று கூட சொல்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு ரூம் போட்டுக் கொடுத்தும் தாமதப்படுத்துகிறார் என்கிறார்கள். அவர் தரப்பில் ஓகே என்று சொன்ன பிறகு, படத்தின் திரைக்கதை சம்பந்தப்பட்டவர்களுக்கும் திருப்தி என்றால்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் ஒரு தகவல் கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அஜித் 62 படத்தில் மகிழ்திருமேனி இயக்குனர் என்றும் அருண் விஜய் கமிட் ஆகியுள்ளதாக தற்போது IMDB இணையத்தளத்தில் பதிவை பார்த்த ரசிகர்கள் அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .விக்கி 6′ என்று பெயரிடப்பட்டுள்ள தனது அடுத்த படத்தைப் பற்றி பேசிய விக்னேஷ் சிவன், தனது மனதுக்கு நெருக்கமான ஒரு புதிய படத்தைத் தயாரிப்பதாக தெரிவித்தார். தற்போது மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும், தான் அஜித்தின் ரசிகன் என்றும், பிளாக்பஸ்டர் படம் எடுக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.