தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின் மறைவுக்குப் பிறகு கடினமான காலகட்டத்தை சந்தித்து வருகிறார். அஜித்தின் தந்தை வயது முதிர்வு காரணமாக மார்ச் 24, வெள்ளிக்கிழமை அன்று காலமானார். வலிமை நடிகரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சகாக்கள் இந்த கடினமான காலங்களில் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்றனர். இந்த மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பிற்குப் பிறகு, அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளதாகவும், தனது அனைத்து பணிகளையும் ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்படவுள்ளதாகக் கூறுகின்றனர். இதில் அனுஷ்கா,அஜீத் இருவரும் நடிக்கவுள்ளார்களாம். மே 15 ம் தேதி தல 62 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும், பெரும்பாலான பகுதிகளை வெளிநாடுகளில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
மற்றொருபுறம் 2 வது ஹீரோயினாக கீர்த்தி சனோன் அல்லது ரித்திகா சிங்கை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றதாம். படத்தின் கதையில் அஜீத் சில மாற்றங்களைச் சொன்னதால் தான் அஜித் 62 படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லைகா புரொடக்ஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜிகேஎம் தமிழ் குமரன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் ஏப்ரல் 2023 இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார். இருப்பினும், அஜித் குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தயாரிப்பாளர், மேலும் விவரங்களை வெளியிடுவதைத் தவிர்த்தார். . ஏகே 62 பற்றிய கூடுதல் விவரங்கள், அதன் வெளியீட்டு தேதி உட்பட, மிக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.