Saturday, April 27, 2024 1:45 am

சார் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்க!.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்!..

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திரையுலகில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாக முயற்சிகள் செய்து நடிக்க துவங்கியவர் நடிகர் அஜித் குமார். அமராவதி என்கிற திரைப்படம் மூலம் அஜித் நடிக்க துவங்கினார். அதன்பின் பல திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்தார். ஆசை, காதல் கோட்டை ஆகிய படங்கள் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. அதன்பின் பல படங்களில் நடித்தார். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை தோல்வி படங்களே. அதன் பின்னர்தான் ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க துவங்கினார். தீனா, பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களையும் பெற்று கொடுத்தது. தற்போது மாஸ் ஹீரோவாக மாறிவிட்ட அஜித் ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் மங்காத்தா. பில்லா திரைப்படம் அஜித்தை ஸ்டைலீஷான ஹீரோவாக மாற்றினாலும், மங்காத்தா திரைப்படம்தான் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது. தற்போது வரை அந்த ரூட்டில்தான் அஜித் பயணித்து வருகிறார். இயக்குனர் வெங்கட்பிரபு அவருக்கு தம்பி போன்றவர். ஜீ படத்தில் அஜித்துடன் நடித்தபோது அவருக்கு நெருக்கமானார். சென்னை 28, சரோஜா ஆகிய படங்களை இயக்கிவிட்டு அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினார் வெங்கட்பிரபு.இவரிடம் அஜித் வாய்ப்பு கட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுபற்றி சொன்ன வெங்கட்பிரபு ‘நான் சென்னை 28 படம் எடுத்து கொண்டிருந்த போது ஒரு புது நம்பரில் இருந்து போன் வந்தது. நானும் சென்னை 28தான். நல்லா பவுலிங் போடுவேன். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனக்கு நடிக்கிறதுக்கு எதாவது வாய்ப்பு இருந்த கொடுங்க’ன்னு ஒருவர் பேசினார். முதலில் அந்த குரல் எனக்கு பிடிபடவில்லை. அப்புறம்தான் தெரிஞ்சது பேசினது அஜித் சார்னு. என்னை எப்பவும் கலாய்த்துக்கொண்டே இருப்பார். என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்’ என வெங்கட்பிரபு பேசியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்