பிரபல தமிழ் நடிகர் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 84 மற்றும் பக்கவாதம் மற்றும் பிற வயது தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.
அஜித்தின் 62ஆவது படத்திற்கான அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அவரின் தந்தை இறந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தந்தை காலமானதால் உச்சகட்ட சோகத்திற்கு ஆளானார் அஜித்.
இந்நிலையில் அஜித் தனது தந்தை பற்றி ஒரு வீடியோவில் கூறிய விடயமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதாவது அவரின் வாழ்க்கையில் தைரியமாக பல முடிவுகளை எடுத்தாலும் அதற்கெல்லாம் பக்கபலமாக இருந்து அஜித்திற்கு துணையாக இருந்துள்ளார் அவரின் தந்தை.
அதுமட்டுமல்லாது சிறு வயதில் படிப்பில் நாட்டம் இல்லாமல் நடிப்பு, பைக் என அஜித் சென்றாலும் அதற்கும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அஜித்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவரை வழிநடத்தினார் அஜித்தின் தந்தையான் சுப்ரமணி.
"எங்கள குடும்பத்துல ஒருத்தரா பாத்தாரு.. ரொம்ப தங்கமான மனுஷன்… உள்ளவிட்டா நல்லா இருக்கும்… அஜித் தந்தை குறித்து ஊழியர் உருக்கம்#ActorAjithKumar | #AjithFather | #Subramaniam | #AjithKumar pic.twitter.com/zOdQ56A870
— 🔥பாண்டியநாட்டுக்காரன்💥 (@lsmlpoosai) March 24, 2023
இவ்வாறாக அஜித்திற்கு ஓர் நல்ல தந்தையாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நண்பராகவும் இருந்து அவரை வழிநடத்திய தந்தையின் பிரிவை அஜித் எவ்வாறு ஏற்றுக்கொள்வார். மேலும் அஜித் தன் குடும்பத்தை பற்றி அவ்வளவாக பேட்டிகளில் பேசியதில்லை என்றாலும், அவரின் “தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர்” தான் என்றும், “நானும் ஒரு தமிழன்” தான் என்றும் அஜித் ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.
Our parents gave us a lot of freedom. My father was a very smart man. He himself was a Rebel.
– Anil Kumar#AjithKumar pic.twitter.com/U3PvBZeD8L
— Trollywood (@TrollywoodX) March 24, 2023
இந்த விடயமானது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு என்ன நடந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என கூறி அஜித் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்தின் தந்தையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மகிழ் திருமேனி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு
கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியத்திற்கு மோகினி என்ற மனைவியும், அனுப்குமார், அஜித்குமார், அனில் குமார் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், நடிகை ஷாலினியை திருமணம் செய்து தனது மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.