Friday, April 26, 2024 6:02 am

அஜித்தின் தந்தையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மகிழ் திருமேனி ! வைரல் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல தமிழ் நடிகர் அஜித் குமாரின் தந்தை பி சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 84 மற்றும் பக்கவாதம் மற்றும் பிற வயது தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.


அஜித்தின் 62ஆவது படத்திற்கான அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அவரின் தந்தை இறந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தந்தை காலமானதால் உச்சகட்ட சோகத்திற்கு ஆளானார் அஜித்.

இந்நிலையில் அஜித் தனது தந்தை பற்றி ஒரு வீடியோவில் கூறிய விடயமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதாவது அவரின் வாழ்க்கையில் தைரியமாக பல முடிவுகளை எடுத்தாலும் அதற்கெல்லாம் பக்கபலமாக இருந்து அஜித்திற்கு துணையாக இருந்துள்ளார் அவரின் தந்தை.

அதுமட்டுமல்லாது சிறு வயதில் படிப்பில் நாட்டம் இல்லாமல் நடிப்பு, பைக் என அஜித் சென்றாலும் அதற்கும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அஜித்தின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவரை வழிநடத்தினார் அஜித்தின் தந்தையான் சுப்ரமணி.


இவ்வாறாக அஜித்திற்கு ஓர் நல்ல தந்தையாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நண்பராகவும் இருந்து அவரை வழிநடத்திய தந்தையின் பிரிவை அஜித் எவ்வாறு ஏற்றுக்கொள்வார். மேலும் அஜித் தன் குடும்பத்தை பற்றி அவ்வளவாக பேட்டிகளில் பேசியதில்லை என்றாலும், அவரின் “தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர்” தான் என்றும், “நானும் ஒரு தமிழன்” தான் என்றும் அஜித் ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.

இந்த விடயமானது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு என்ன நடந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என கூறி அஜித் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் தந்தையின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மகிழ் திருமேனி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ உங்கள் பார்வைக்கு

கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியத்திற்கு மோகினி என்ற மனைவியும், அனுப்குமார், அஜித்குமார், அனில் குமார் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், நடிகை ஷாலினியை திருமணம் செய்து தனது மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்