அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும் இந்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மகிழ் திருமேனி படத்திலும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும், துனிவு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த வருடம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் அஜித் நடித்த துணிவு. துணிவுக்கு போட்டியாக விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது. வாரிசு படத்தை முடித்த உடனேயே நடிகர் விஜய் அதற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடிக்க துவங்கி விட்டார்.
அதேபோல நடிகர் அஜித்தும் துணிவு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்தத் திரைப்படத்தின் கதை அஜித்திற்கு பிடிக்காமல் போகவே அவர் அந்த திரைப்படத்தில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் அஜித் அடுத்து எந்த இயக்குனர் இயக்கத்தில் படம் நடிக்கப் போகிறார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தற்சமயம் தமிழில் ஏற்கனவே மீகாமன், கலகத் தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை முடித்துவிட்டு சுற்றுலா செல்ல இருக்கிறார் அஜித். எனவே இந்த படத்தை முடிந்த அளவு சீக்கிரமாக முடிக்க வேண்டும் என அவர் இயக்குனரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் மகிழ் திருமேணி இன்னும் படத்தின் திரைக்கதையையே அஜித்குக்காக மெனக்கெட்டு கதை எழுதி வருகிறார் என கூறப்படுகிறது. மேலும் இதனால்தான் படத்தின் டைட்டிலை இன்னும் அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கிரீடம் (ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள்), பில்லா, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உட்பட பல முறை அஜித் படத்தில் நீரவ் ஷா பணியாற்றியுள்ளார். விவேகம் படத்திற்கு பிறகு ஏகே 62 படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.