Saturday, April 1, 2023

உதயநிதி நடித்த ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முழு விமர்சனம் இதோ !

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா சாவ்லா மற்றும் ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கண்ணை நம்பாதே ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் பட புகழ் மு.மாறன் இயக்குகிறார்.உடல்நிலை சரியில்லாத பூமிகாவுக்கு காரை ஓட்ட உதவ உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அவனுடைய ரூம்மேட் பிரசன்னா அவளுடன் திருகிறாள், அவள் இறந்துவிடுகிறாள். இப்போது, ​​இருவரும் ஆழ்ந்த சிக்கலில் உள்ளனர் மற்றும் நிலைமையிலிருந்து வெளியேற மோசமாக விரும்புகிறார்கள்.

உதயநிதி நடிப்பில் கண்ணை நம்பாதே திரைப்படம் என்று வெளியாகி உள்ளது திரில்லர் வகையில் எடுக்கப்பட்டு இருக்கும் அந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு.மாறன் இந்த ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், மாரிமுத்து, பூமிகா, ஆத்மிகா, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார். அன்று இரவே பூமிகா ஓட்டி வரும் கார் விபத்துக்குள்ளாகிறது. அதை பார்க்கும் உதயநிதி, பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு விட்டு அவரின் காரை எடுத்து வருகிறார். அத்துடன் மறுநாள் காலை அந்தக் காரை பூமிகாவிடம் கொண்டு சேர்க்க நினைக்கிறார். ஆனால் அந்த காரில் அவர் மரணமடைந்த நிலையில் உடல் கிடக்கிறது. இதற்கு பின் என்ன நடக்கிறது? அந்த மரணத்திற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்ன? அந்த சம்பவத்தில் உதயநிதி எப்படி சிக்கினார்? அதற்கு பின் இருக்கும் பின் இருக்கும் பெரும் திட்டம் என்ன? என்பதே கண்ணை நம்பாதே.

ஒரு கொலையை மறைக்க இரண்டு நண்பர்கள் பல முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இதை திரில்லர் பட பாணியில் நிதானத்துடன் படமாக்கியுள்ளார் மு.மாறன். இந்தப் படம் 2 மணி நேரம் 12 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்கதையில் சில கேள்விகள் நமக்கு இருந்தாலும், கதைக்கு தேவையில்லாத காட்சிகளை படத்தில் சேர்க்கவில்லை. இதனால் படம் எந்த இடத்திலும் சோர்வை ஏற்படுத்தவில்லை.

சில திரில்லர் படங்களின் ப்ளாஷ்பேக் காட்சிகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்காது அல்லது வலுவில்லாத காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை ப்ளாஷ்பேக் காட்சிகள் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. மேலும் படத்தில் இடம்பெறும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தாமல் அடுத்தடுத்து நகர்ந்து சென்றுவிடுகின்றன.

இதில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும்சரியான முக்கியத்துவத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். இது தேவையில்லாத கதாபாத்திரம் என்று எதையும் சொல்ல முடியாது.’கண்ணை நம்பாதே’ திரில்லர் படம் என்ற பார்வைக்குள் நாம் சென்று விடுகிறோம். இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் சென்னை நகரில் திரும்பும் இடங்களில் எல்லாம் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் படத்தின் காட்சிகள் நடைபெறும் மூன்று இடங்களில் மட்டுமே சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளன. மேலும் இரவு நேரங்களில் மக்கள் சாலைகளில் செல்வதே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் நண்பர்களை பிந்தொடரும் கதாபாத்திரம் எப்படி அவர்களுக்கு முன்பே சம்பவ இடங்களுக்கு செல்கிறது என்பதும் நமக்கு தோன்றுகிறது. எனவே, அந்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

உதயநிதி, பிரசன்னா, பூமிகா என நடிகர்களை பொருத்தவரையில் திரில்லர் படத்திற்கு தேவையான சீரியஸை காடிகளில் கொண்டு வந்துள்ளனர். ஆனால் ஒரு கொலையை பார்க்கும் இடங்களில் இவ்வளவுதான் அதிர்ச்சியா? என்றும் ஒரிரு இடங்களில் தோன்ற வைக்கிறது.கண்ணை நம்பாதே படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகியவை பக்கபலமாக அமைந்துள்ளன. இவை இரண்டும் காட்சிகளை பார்வையாளர்களின் மனதிற்கு கடத்த உதவியுள்ளன.

இந்தப் படம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் அதை எந்த இடத்திலும் நமக்கு நினைவுபடுத்தவில்லை. இப்போதும் ரசிக்கும் வகையிலேயே கண்ணை நம்பாதே உருவாக்கப்பட்டுள்ளது. மு.மாறனின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் பிடித்தவர்களுக்கு நிச்சயம் இந்த கண்ணை நம்பாதே படமும் பிடிக்கும். திரில்லர் பாணியில் வெளியாகியுள்ள இந்தப் படம் Decent Thriller வகையில் சேர்கிறது.

இயக்குனரின் முந்தைய படம் கலவையான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும், சாம்.சி.எஸ்ஸின் ஸ்கோர் அதை கண்ணியமாக பேக் செய்தது. இங்கே சித்து குமார் இசையமைப்பாளர் மற்றும் அவரது பணி முழுவதும் தற்செயலான டிரம்-வகை இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது, இது பூஜ்ஜிய மதிப்பை சேர்க்கிறது. ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது, ஏராளமான இரவு காட்சிகளை அளவீட்டு வெளிச்சத்துடன் நன்றாக படம் பிடித்துள்ளார். சான் லோகேஷின் எடிட்டிங் இறுக்கமாக இருந்திருக்கலாம், அநேகமாக ஓரிரு சுழலும் மற்றும் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளைக் குறைத்திருக்கலாம். நிலைகள் சமநிலையில் இல்லாததால் ஒலி கலவை மிகவும் மோசமாக உள்ளது. உதடு ஒத்திசைவு என்பது படம் முழுவதும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை.

மிகவும் யூகிக்கக்கூடியது மற்றும் இயக்குநரின் நேர்த்தியைக் கொண்டிருக்கவில்லை, இது பல இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் கடந்து செல்லக்கூடிய ஒரு மர்மமான வெளியூர் பயணம், அதில் ஏதோ ஒன்று அல்லது மற்றொன்று தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, அது ஒரு அளவிற்கு சுவாரஸ்யமானது.

சமீபத்திய கதைகள்