இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர், மேலும் அவர் பல கிளாசிக் ஹிட்களை வழங்கியுள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனருக்கு சரியாகப் போகவில்லை, ஏனெனில் அவரது ‘வணங்கன்’ முன்னணி நடிகரின் மாற்றத்தை எதிர்கொண்டது. தற்போது, கன்னியாகுமரியில் அருண் விஜய்யுடன் இணைந்து ‘வணங்கன்’ படப்பிடிப்பை பாலா மீண்டும் தொடங்கியுள்ளார் என்பது லேட்டஸ்ட் அப்டேட். ‘வணங்கன்’ படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு, வேறு ஹீரோவை வைத்து படத்தை இயக்க முடிவு செய்த பாலா, அவருக்குப் பதிலாக அருண் விஜய்யைத் தேர்வு செய்துள்ளார். இந்தப் படத்துக்காக அருண் விஜய் தனது தோற்றத்தைப் பூட்டிவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை பாலா மீண்டும் தொடங்கவிருப்பதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக திகழ்பவர் தல அஜித். இவருடைய படங்கள் தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டி தருபவையாக உள்ளன. தல அஜித்தும் ஒரு காலத்தில் ஹிட் கொடுக்க தடுமாறியவர் தான். அனைத்து நடிகர்களுக்கும் சோதனை காலம் என்று ஒன்று இருந்தது அனைவரும் அறிந்ததுதான்.
சில நடிகர்கள் நிராகரித்த கதைகள் மற்று நடிகர்கள் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற கதை தமிழ் சினிமாவில் ஏகப்பட்டது உள்ளது. அந்த வகையில் தல அஜித்தும் பல கதைகளை நிராகரித்துள்ளார். அதில் சில ஹிட் படங்களும் அடங்கும்.
நடிகர் சூர்யாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் நந்தா. ஆனால் முதலில் நடிக்க இருந்தவர் அஜித். அதேபோல் நடிகர் ஆர்யாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது நான் கடவுள். இந்த படத்திற்கும் முதன்முதலில் நடிக்க இருந்தவர் தல அஜித் தான்.
ஆனால் இந்த இரண்டு படங்களுமே டைரக்டர் பாலா எழுதிய கதைகள். தல அஜீத்துக்கும் பாலாவுக்கும் நீண்ட நாட்களாக மனக்கசப்பு இருந்து வருவது உண்மைதான். நான் கடவுள் படத்திற்காக உடல் இளைத்து நீளமாக முடி வளர்த்து கேரக்டராக தன்னை மாற்றிக்கொண்ட தல அஜித்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி படத்திலிருந்து நீக்கிவிட்டார் பாலா.
இந்நிலையில் இயக்குனர் பலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா, நடிகை பூஜா, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் குமார். இதற்காக கதையை அஜித்திடம் தெரிவித்துள்ளார் பாலா, ஆனால் முழு கதையையும் அஜித் அவர்களிடம் சொல்லவில்லை. நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் பாலா அறிவுறுத்தலின் பேரில் அஜித் அதிகமாக தலைமுடி வளர்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கான அட்வான்ஸ் பணமும் கொடுக்கப்பட்டது. ஒப்பந்தத்துக்கான படிவத்தில் கையெழுத்தும் போட்டுள்ளார் அஜித் குமார். படப்பிடிப்புக்கான அணைத்து வேலைகளும் நடைபெற்று வந்த நேரத்தில். கதையில் அஜித் அகோரியாக காசியில் நிர்வாணமாக உடை அணிந்து நடிக்கும் காட்சிகள் பற்றி இயக்குனர் பாலா தெரிவிக்க இதில் நடிக்க அஜித் மறுத்துள்ளார்.
ஆனால் பாலா எனது படத்தில் நான் என்ன சொல்கிறேனோ அதை தான் நீங்க கேட்க வேண்டும் என பிடிவாதமாக பேச. திட்டவட்டமாக மறுத்த அஜித், நீங்க வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை எடுங்க என தெரிவித்துள்ளார். ஆனால் இயக்குனர் பாலா நீங்கள் அட்வான்ஸ் வாங்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திடீங்க. இப்ப படத்தில் நடிக்க முடியாது வேறு ஒரு நடிங்கரை வைத்து படத்தை எடுங்கள் என்றால் என்ன அர்த்தம். பெரும் பிரச்சனையாகிவிடும், ஒழுங்கு மரியாதையை நான் சொல்றத கேட்டு படத்தில் நடிக்க வேண்டும் என பாலா மிரட்டியுள்ளார்.
மேலும் அஜித் முன்பு குரலை உயர்த்தி பேசிய பாலா மிரட்டலை பொருட்படுத்தாமல், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்க, நான் அட்வான்ஸ் தொகையை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என பாலா மிரட்டலுக்கு எகிறி அடிப்பது போன்று பதிலளித்துவிட்டு, நான் கடவுள் படத்தில் இருந்து விளக்கியுள்ளார். இந்த விஷத்தை சமீபத்தில் சினிமா துறையில் சேர்ந்த பிரபலம் வெளியிட்டார்.
ஆனால் தல அஜித் நான் கடவுள் கெட்டப்பில் செம்ம மாஸாக உள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இணையதளத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
அந்த புகைப்படம் :
‘வணங்கன்’ படத்திற்கான பல ஷெட்யூல்களை முடித்த சூர்யா கடந்த டிசம்பரில் படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார், ஏனெனில் படம் நடிகரின் நிலைக்கு பொருந்தாது என்று இயக்குனர் கருதினார். கதாநாயகியாக நடித்த கிருத்தி ஷெட்டிக்கு பதிலாக ரோஷினி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பால சுப்ரமணியம் ஆகியோர் படத்திற்கு இசையமைப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.