Friday, April 26, 2024 3:14 pm

ஆட்டத்தை ஆரம்பித்த அஜித் !! AK 62 படத்தின் கதை இதுவா மெர்சலா இருக்கே !

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முன்னதாக டிசம்பரில், ஜனவரி 2023 இல் தனது ‘துனிவு’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாக, நடிகர் அஜித்குமார் தனது உலகப் பயணத்தின் முதல் கட்டத்தை முடித்துள்ளார். பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட நட்சத்திர நடிகர், தனது உலக சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டத்திற்கு தயாராகிவிட்டார். லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் ‘ஏகே 62’ படத்தை முடித்த பிறகு அஜித் தனது உலகப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்குகிறார். சுவாரஸ்யமாக, இந்த நேரத்தில், அவரது பைக் பயணம் ‘பரஸ்பர மரியாதைக்காக சவாரி’ என்று அழைக்கப்படும் ஒரு காரணத்திற்காக இருக்கும்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள ஏகே 62வது திரைப்படத்தின் கதை முன்னதாக ஆர்யாவுக்கு சொன்ன கதை என தகவல்கள் வெளியாகி உள்ளன.போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து 3 படங்களில் நடித்து வந்த நடிகர் அஜித், அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், மகிழ் திருமேனி தான் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிப்ரவரி முதல் வாரத்தில் லியோ படத்தின் அப்டேட் வெளியாகி அந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் படத்தில் நடிக்க நடிகர்கள் செட் ஆகாமல் படப்பிடிப்பு தொடங்குவதே தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

2010ம் ஆண்டு வெளியான முன் தினம் பார்த்தேனே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. அதன் பிறகு தடையற தாக்க படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்கினார். 2014ம் ஆண்டு ஆர்யா, ஹன்சிகா நடிப்பில் மீகாமன் படம் வெளியானது. 2019ல் மீண்டும் அருண் விஜய்யை வைத்து தடம் படத்தை கொடுத்தார். கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படத்தை இயக்கி உள்ள மகிழ் திருமேனி அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இதுவரை 5 படங்கள் வெளியான நிலையில், அருண் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடித்த தடம் படம் மட்டுமே ஹிட் அடித்தது. மற்ற அனைத்து படங்களும் படு சொதப்பலாக மாறிய நிலையில், விக்னேஷ் சிவனை விட அஜித்தின் படத்தை மகிழ் திருமேனி சிறப்பாக இயக்குவார் என லைகா தரப்பு மகிழ் திருமேனியை டிக் அடித்திருக்கிறது.

தடம் படம் ஹிட் அடித்ததுமே நடிகர் விஜய்க்கு மகிழ் திருமேனி ஒரு கதை சொல்லி இருந்தார். அந்த கதை பிடித்துப் போனதாகவும் விரைவில் படம் பண்ணுவோம் என விஜய் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய் – மகிழ் திருமேனி காம்போ இணைவதற்குள் அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி இணைந்துள்ளது.

உடனடியாக விஜய்க்கு சொன்ன கதையில் தான் அஜித் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய்க்கு சொன்ன கதையையும் அஜித்துக்கு மகிழ் திருமேனி சொல்லி இருக்கிறாராம். ஆனால், ஏகே 62 படத்தின் கதை விஜய்க்கு சொன்ன கதை இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீகாமன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க மகிழ் திருமேனி உருவாக்கி வைத்திருந்த கதையில் தான் தற்போது அஜித் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இது குறித்தோ அஜித் 62 படத்தை இயக்கப் போவது குறித்தோ மகிழ் திருமேனி இன்னமும் வாய் திறக்கவே இல்லை.

அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வணங்கான் படத்திற்காக அருண் விஜய் பிசியாகி விட்டாராம். இந்நிலையில், ஆர்யாவை வில்லனாக போடலாமா என்கிற ஆலோசனையில் மகிழ் திருமேனி இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆர்யாவுக்காக உருவாக்கப்பட்ட கதையில் ஆர்யாவே வில்லனாக நடிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டதே என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

‘துனிவு’ நட்சத்திரம் தனது உலகச் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்து முடித்திருந்தார். கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் லடாக்கிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. ஆகஸ்ட் 2013 இல், அஜித் தனது BMW பைக்கில் புனேவில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. நடிகர் தனது பயணத்தை முடிக்க 19 மணி நேரம் எடுத்துக்கொண்டார், அந்த நேரத்தில் அவர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயணத்தை மேற்கொண்டார். அதன் பிறகு அஜித்குமார் பலமுறை பைக் ட்ரிப் சென்றுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்