Monday, April 29, 2024 2:15 am

துணிவுல இந்த சீன் வரும் போது யாரும் சீட்ல யாரும் உட்கார மாட்டாங்க !! சமுத்திரக்கனி கூறிய உண்மை இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி முதன்முறையாக அஜீத் குமாருடன் துனிவு படத்தில் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார், ஆனால் அந்த நட்சத்திரத்துடன் முதல்முறையாக பணிபுரிவது போல் தனக்கு ஒருபோதும் தோன்றவில்லை என்று கூறுகிறார்.மேலும் துணிவு திரைப்படம் வெளியாகும் அன்றே தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் இருதரப்பு ரசிகர்களும் எங்கள் படம் தான் பெஸ்ட் என போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட் படமாகவும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பக்கா ஆக்சன் திரைப்படமாகவும் உருவாகி இருக்கிறது.

எனவே எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதில் அஜித் கூலான லுக்கில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார். இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இது திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் சமுத்திரகனி ஏராளமான சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதில் ஹச்.வினோத் அவர்களை சந்தித்து பேசியது பற்றி கூறியுள்ளார்.

அதாவது திடீரென ஒரு நாள் ஹைதராபாத்தில் வினோத் இருந்தார் நானும் ஹைதராபாத்தில் தான் இருந்தேன் வினோத் எனக்கு ஃபோனில் எங்கு இருக்கிறீர்கள் அண்ணே என்றார் நான் ஹைதராபாத்தில் தான் இருக்கிறேன் மாலை சந்திப்போமா என்றார் மாலை என்ன நீங்கள் எப்பொழுது எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் நான் இப்பொழுதே வருகிறேன் என உடனே அங்கு போனேன் படப்பிடிப்பு தளத்திற்கான செட் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இயக்குனர் தம்பியுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது இதுதான் அந்த படம் என புத்தகத்தை கையில் கொடுத்தார். அங்கிருந்து கிளம்பி நான் அலுவலகத்திற்கு சொல்வதுக்குள் படித்து முடித்து விட்டேன் படித்து முடித்தவுடன் உடனடியாக திரும்பி சென்று வைத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் அதனுடைய மதிப்பு அதனுடைய சக்தி நமக்கு தெரியும் அல்லவா நாம் வைத்திருக்கக் கூடாது என்று அவரிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கும் பொழுது தா ன் தம்பி சொன்னார்.

இந்த கமிஷனர் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் அண்ணா என்றார். மிகச் சிறப்பாக இருக்கிறது தம்பி படிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை முடித்ததும் தெரியவில்லை ஏனென்றால் இந்த வேகத்தில் தான் படமும் இருக்கும் என்று இருந்தது அதை படித்தவுடன் மிகவும் சந்தோஷமாகிவிட்டது அதிரடியான ஒரு முரட்டுத்தனமான ஆக்ஷன் இருக்கிறது அல்லவா… அதாவது ஜல்லிக்கட்டு மாதிரி அந்த மாதிரி தான் இருக்கும் படம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் இது மிகவும் அற்புதமாக இருக்கிறது.

அந்த தளத்தில் நமக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது அதை படித்த உடனே நீங்கள் நிறைய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் இப்பொழுது நடந்தது போல் நடக்கக்கூடாது இப்பொழுது பேசுவது போல் பேசக்கூடாது வேறு ஒரு ஆளாக இருக்க வேண்டும் என தம்பி சொன்னார் உடனே தயாரானோம் என நடிகர் சமுத்திரக்கனி பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


சமுத்திரக்கனி மேலும் ஒரு நடிகராக வேறொரு படத்தின் செட்டில் சேருவதற்கு முன்பு தனக்குள்ள எழுத்தாளர்-இயக்குனரை வீட்டில் விட்டுவிடுவதாகவும் கூறுகிறார். “எனக்குள் இருக்கும் எழுத்தாளரை நான் ஒருபோதும் அழைத்துச் செல்ல மாட்டேன், ஏனெனில் அது பிரச்சனைகளை உருவாக்கலாம். நான் ஒரு இயக்குனரின் நடிகராக இருக்க விரும்புகிறேன், அவர்களின் பார்வைக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன், ”என்று அவர் விளக்குகிறார்.

அவர் கூறுகையில், இப்படம் ஆதிராதி ஆக்‌ஷன் த்ரில்லராகவும், அஜித் ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாகவும் இருக்கும். “அவரது ரசிகர்களுக்கு அட்ரினலின் அவசரத்தை ஏற்படுத்தும் பல மாஸ் தருணங்கள் படத்தில் உள்ளன. நிறைய விவரங்களுடன் சுவாரஸ்யமாக இருந்ததால் ஒன்றரை மணி நேரத்துக்குள் ஸ்கிரிப்டைப் படித்துவிட்டேன்,” என்று அவர் தெரிவிக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்