அஜித் அடுத்ததாக இயக்குனர் எச் வினோத்தின் ‘துனிவு’ படத்தில் நடிக்கிறார், இது பொங்கலுக்கு ஜனவரி 12, 2022 அன்று திரைக்கு வர உள்ளது. அவர் விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த படப்பிடிப்பைத் தொடங்குவார், இது தற்காலிகமாக ‘ஏகே 62’ என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அஜீத் தனது உலகப் பயணத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கவுள்ளார். அஜித் ஓராண்டுக்கும் மேலாக படங்களில் இருந்து ஓய்வு எடுப்பார் என்றும், 62 நாடுகளுக்கு 18 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்திலும் அதிகமான சண்டை காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகள் அதிகம் இருப்பதாக படக்குழு சைடிலிருந்து தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை கூறி வைத்து ரிலீஸ் ஆகிறது அதே தேதியில் அஜித்தின் துணிவு திரைப்படம் 100% எதிர்த்து மோதுகிறது.
படம் வெளிவந்த பிறகு தான் இரண்டு படங்களும் சண்டை போட்டுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் சண்டை போட்டுக் கொள்கின்றனர் இந்த நிலையில் அந்த சண்டையை பெரிசாகும் வகையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தை பேட்டி ஒன்றில் அஜித் – விஜய் குறித்து பேசியது இன்னும் பரபரப்பை கிளப்பி உள்ளது அதில் அவர் சொன்னது என்னவென்றால்..
தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ.. அஜித்தை விட விஜய்க்கு மார்க்கெட் அதிகம் அதனால் சரிசமமான தியேட்டர்கள் வழங்கக்கூடாது. வாரிசு படத்திற்கு இன்னும் 50 தியேட்டர்கள் சேர்த்து தர உதயநிதி உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்த செய்தி பெரிய அளவில் வைரலானது அதன் காரணமாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவை..
தல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் தற்போது இதற்கு அவர் பதில் கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க நான் 45 நிமிடம் பேட்டி கொடுத்தேன். இதில் 30 செகண்ட் வீடியோ வெளியாகி தற்பொழுது சர்ச்சையை கிளப்பி உள்ளது. நான் கூறியது வேறு என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
வம்ஷி பைடிபள்ளி இயக்கிய ‘வரிசு’ படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த குடும்ப நாடகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.