Friday, April 26, 2024 6:08 pm

பெரும் உச்சத்தை அடைந்தும் பிடித்த இடத்தை தக்க வைத்து கொள்ள தெரியாத பிரபல நடிகர்களின் லிஸ்ட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அடைய கலைஞர்கள் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. கடும் முயற்சி, உழைப்பை போட்டு நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்தவுடன் தன்னுடைய போக்கையே மாற்றிக் கொள்ளும் நடிகர்கள் சிலர் இருக்கிறார்கள். அந்த வகையில் பெரும் உச்சத்தை அடைந்த நடிகர்கள் இன்று அவர்கள் இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு மறைந்து கிடக்கிறார்கள்.

அந்த வகையில் முதலாவதாக நடிகர் சந்திரபாபுவை குறிப்பிடலாம். மேற்கத்திய கலாச்சாரங்களை தான் நடிக்கும் படங்களில் புகுத்தியவர் சந்திரபாபு. ஆங்கில படங்கள் பலவற்றை சிவாஜியை பார்க்க வைத்து அவர்கள் நடிப்பையும் சிவாஜியிடம் காட்டியவர் சந்திரபாபு. தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்ற சந்திரபாபு இடையிலேயே படங்கள் தயாரிக்கவும் இயக்கவும் ஆரம்பித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவுமே சரியான ரிசல்ட்டை கொடுக்க வில்லை. அதன் பின் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி அவருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்தும் அதை சந்திரபாபு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இரண்டாவது மைக் மோகன். ஒரு கட்டத்தில் ஹிந்தி , கன்னடம் என கமல் பாம்பே பக்கம் போனதும் அந்த இடத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர் தான் மைக் மோகன். கமலுக்கு ஏற்கெனவே பெண் ரசிகைகள் ஏராளம். அவருக்கு பிறகு அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டார் மைக் மோகன். வெள்ளிவிழா நாயகன் என்றே அவரை அழைப்பர் தமிழ் சினிமாவில். அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பவர் நடிகர் விஜயின் தாய்மாமாவும் பாடகருமான சுரேந்திரன் தான். சுரேந்திரன் ஒரு சமயம் நான் மைக் மோகனுக்கு வாய்ஸ் கொடுக்கிறேன் என்று சொன்னதும் மோகனுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின் சொந்தக் குரலிலேயே பேச ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அந்த படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ராமராஜன். ரஜினி, கமல் ,விஜயகாந்திற்கு அடுத்தபடியாக மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றவர் நடிகர் ராமராஜன். கிராமத்து நாயகனாகவே வலம் வந்த ராமராஜன் அதிமுகவில் இணைந்திருந்தார். ஒரு கட்டத்தில் எம்ஜிஆரை எப்படி பார்க்க ஆரம்பித்தார்களோ அதே நிலையில் தான் ராமராஜனையும் மக்கள் பார்க்க தொடங்கினார்கள். அதன் பின் நடிகை நளினியை விவாகரத்து செய்தது, அதிமுகவில் இருந்து பிரிந்தது என தன் செல்வாக்கை இழந்தார். படங்களின் வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. சிறிது காலத்திற்கு பிறகு வில்லனாக நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்திருக்கிறது. நடித்தால் ஹீரோ தான் என்று அப்படியே இருந்துவிட்டாராம்.

நடிகர் கார்த்திக். நவரச நாயகனாக மக்கள் மனதில் பதிந்தவர் நடிகர் கார்த்திக். ஆணுக்கு உண்டான அத்தனை அம்சமும் கொண்ட அழகு நாயகனாக வலம் வந்தார் கார்த்திக். ஆனால் இடையிடையே சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வராமை, திடீரென்று வேறு எங்கேயாவது சென்று விடுவது என்பது மாதிரியான செய்கையால் தயாரிப்பாளர், இயக்குனர்களின் அதிருப்திக்கு ஆளானார். இதில் தனியே கட்சியை ஆரம்பித்து அதிலும் மொத்த் செல்வாக்கை இழந்தார் கார்த்திக். இந்த தகவல்களை பயில்வான் ரெங்கநாதன் அவரது யுடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்