அஜீத் நாயகனாக நடிக்கும் துணிவு திரைப்படம், 2023 ஜனவரியில் பொங்கலுக்கு திரையரங்குகளில் திரைக்கு வரவிருக்கும் பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமாகும். இப்படத்தில் இன்னும் ஒரு பாடல் படப்பிடிப்பு மீதமுள்ளது [அனிருத் பாடிய சில்லா சில்லா, நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர்] அடுத்த வாரம் [நவம்பர் 24, 2022 – நவம்பர் 26, 2022 சென்னை கோகுலம் ஸ்டுடியோவில்] நடைபெற்று வருகிறது
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த ஏகே 62 படத்தை தயாரிக்கும் பேனரான லைகா புரொடக்ஷன்ஸ், டெண்ட்கோட்டாவுடன் இணைந்து வெளிநாடுகளில் துணிவு படத்தை விநியோகம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காத்திருக்கிறது.
Agreement Signed for AK's #Thunivu 🔥
Grand Release this Pongal 2023 in your Ram Cinemas !! pic.twitter.com/NnZUkpXbIA— Ram Muthuram Cinemas (@RamCinemas) November 15, 2022
இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சோழ வரலாற்று கதை ஒன்றில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதி வருவதாகவும் கூறப்பட்டது.
அந்த கால இடைவெளியில் சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த மன்னர் கதையில் ராஜராஜ சோழனாக வேடம் தரிப்பதற்காக, தன்னுடைய லுக்கை மாற்றப் போகிறார்.
ஆனால் முதலில் அஜித்தின் அஸ்தானை இயக்குனர் ஒருவருடைய படத்தில் ராஜராஜ சோழன் கெட்டப்பில் நடிப்பதற்காக மறுப்பு தெரிவித்தாலும், தற்சமயம் ரசிகர்கள் வரலாற்று கதையை விரும்பி பார்க்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, இப்போது அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் இரண்டு படங்களுமே அஜித்திற்கு முக்கியமான படங்கள். விஷ்ணுவர்தன் எப்போதோ அஜித்திற்காக கதை தயார் செய்து வைத்து விட்டார். ஆனால் அஜித் வேறு இயக்குனர்களிடம் சென்றுவிட்டார்.
ஏற்கனவே அஜித்திடம் ராஜராஜசோழன் கதையை சொல்லி பாலகுமாரன் ஸ்க்ரிப்ட் எழுத எல்லாம் தயார் நிலையில் இருந்தது. ஆனால் இது தனக்கு செட்டாகாது என நினைத்துக் கொண்டு அஜித் அதை நிராகரித்து விட்டார்.
தற்போது வரலாற்று சம்பந்தமான கதைகள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்கின்ற காரணத்தால், மீண்டும் விஷ்ணுவர்தன் மற்றும் அஜித் இணைவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஆகையால் முன்பு எடுத்த முடிவை அஜித் மாற்றிக் கொண்டு விஷ்ணுவரதன் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதற்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள ஒன்றரை வருடம் எடுத்துக் கொள்ளப் போகிறார்.
இந்த தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நானும் விஷ்ணுவர்தனும் சோழர் கால கதை ஒன்றை உருவாக்கி வருவதாகவும், அந்த கதையில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் எழுத்தாளர் பாலகுமாரன் உறுதி செய்துள்ளார். எனவே சோழ மன்னன் கதையில் அஜித் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கும் இப்படத்தின் திரையரங்கு முன்பதிவு 2 மாதங்களுக்கு முன்பே விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. துணிவு படத்தை எச்.வினோத் இயக்குகிறார் மற்றும் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் தற்போது முதல் சிங்கிள் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.