அஜீத் குமாரின் அடுத்த படமான துணிவு, பொங்கல் வெளியாவதை உறுதிசெய்து, எச்.வினோத் இயக்கும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
துனிவு குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால், டப்பிங் செயல்முறை நடந்து வருகிறது, மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மஞ்சு வாரியர், படத்தில் தனது பாத்திரத்திற்காக குரல் கொடுக்கத் தொடங்கியதை பகிர்ந்து கொள்ள தனது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்து கொண்டார்.
மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கும் எச் வினோத்தின் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் வாரிசு படத்தை எதிர்கொள்கிறது.
1987ல் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையைப் பற்றிய கதை தான் இந்தப்படத்தின் கதை. எச்.வினோத் முதலில் பத்திரிகையாளராகத் தான் இருந்துள்ளார். அதன் பின் தான் அவர் இயக்குனரானார். அதனால் அவர் ஆய்வு செய்து எழுதுவது அவருக்கு புதிதல்ல. இந்தப்படமும் அப்படிப்பட்ட ஆய்வுக்குப் பிறகு எழுதியது தான். படத்தின் கதை இதுதான்.
ஒட்டுமொத்த இந்தியாவுமே அரண்டு போன நிகழ்வு தான். பஞ்சாப் நேஷனல் வங்கியின் லூதியானா கிளையானது பஞ்சாப்பில் உள்ளது. இந்த வங்கி 2 மாடி கட்டடம் கொண்டது. பணப்புழக்கம் நிறைந்த வங்கி இதுதான்.
இந்த வங்கியைப் பற்றி ஒரு கும்பல் முழுவதுமாக நோட்டமிடுகிறது. எந்தெந்த அறைகளில் பணம் இருக்கு? எங்கெங்கு காவல் போடப்பட்டுள்ளது? எங்கெங்கு அதிகாரிகள் உள்ளனர்? அவர்கள் எந்த நேரத்தில் உள்ளே வர்றாங்க…எந்த நேரத்தில் வெளியே போறாங்க? மொத்தம் எத்தனை அறைகள் உள்ளன? என அலசி ஆராய்ந்து வருகிறது.
1987 பிப்.12ம் தேதி தான் கொள்ளை சம்பவம் அரங்கேறுகிறது. அன்று காலை வங்கி வாசலில் 2 மேட்டடார் வேனும், ஒரு பியட் காரும் வந்து நிற்கிறது. அதிலிருந்து 15 இளைஞர்கள் சரசரவென இறங்கி வங்கியினுள் செல்கின்றனர். அவர்களில் 6 பேர் மட்டும் போலீஸ் உடையில் வருகின்றனர்.
வங்கியினுள் நுழைந்ததுமே இடது புறம் பெரிய அறை ஒன்று உள்ளது. அங்கே தான் போறாங்க. முதல்லயே எது எது எங்கெங்க இருக்குன்னு கரெக்டா பிளான் பண்ணி தான் வந்துருக்காங்க. அந்த பெரிய அறையில் தான் வங்கியின் ஒட்டுமொத்த பணமும் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.
அப்போ வங்கி ஊழியர்கள் யாருங்க…நீங்க…இப்போ போலீஸ் வராதேன்னு சந்தேகத்தோடு கேட்டுருக்காங்க. நாங்கள்லாம் பஞ்சாப் போலீஸ். பேங்க் பாதுகாப்புக்கு வந்துருக்கோம்னு சொல்றாங்க. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களும் உள்ளே வந்துக் கொண்டு இருக்காங்க.
அப்போ தான் யாருக்கும் சந்தேகம் வராதுன்னு பிளான் பண்ணி போறாங்க. அதே மாதிரி கூட்டத்தோடு கூட்டமா கலக்குறாங்க. அந்த அறைக்கும் போயிடுறாங்க. உடனே கையில இருந்த துப்பாக்கியை வெளியே எடுக்குறாங்க. அங்க இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எல்லோரையுமே உடனடியா உட்காரச் சொல்றாங்க. இதை யாருமே அங்கிருந்தவங்க எதிர்பார்க்கல.
எல்லோரும் பயந்து நடுங்கி உட்கார ஆரம்பிக்கிறாங்க. துப்பாக்கியை பிடித்தவர் இப்போது சொல்றார். யாராவது எழுந்து ஏதாவது வேலையைக் காட்டணும்னு நினைச்சீங்கன்னா….யோசிக்கவே மாட்டேன்… நான் உடனே சுட்டுத்தள்ளிடுவேன்.
உள்ளே போனவங்க பணத்தை எல்லாம் பேக் அப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மொத்தம் 5 கோடியே 70 லட்ச ரூபாய். இதை சுருட்டிக்கிட்டு கும்பல் வெளியே வருது. இன்னொரு அறையில ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் போட்டு அடைச்சிட்டாங்க. இன்னொரு வேடிக்கை என்னன்னா வெளியே வந்துட்டு ஒரு அறையில இருந்து பங்கு பிரிச்சிட்டாங்க.
இது பட்டப்பகல்ல நடக்குற சம்பவம்…பங்க பிரிச்சதுக்கு அப்புறம் தான் ஒவ்வொருத்தரா பிரிஞ்சி போறாங்க. 2 மணி நேரம் இந்த கொள்ளை சம்பவம் நடந்துருக்கு.
இந்த சம்பவத்துல ஒருத்தருக்கு கூட காயம் ஏற்படல. ஒரு தோட்டாவைக் கூட காலியாக்கல. எவ்ளோ பெரிய விஷயம்…! பஞ்சாப் போலீஸ் அதுக்குப் பிறகு தான் வருது. சுற்றி சுற்றி விசாரிக்காங்க. ஆனா அவங்களுக்கு எதுவுமே பிடிபடல. ஒரு சின்ன துப்பு கூட கிடைக்கல. அரசும் பிரஷர் கொடுக்குது. போலீஸ் திணறுது.
உடனடியா சிபிஐ அதிகாரிகளுக்கு இந்த வழக்கு போகிறது. சிபிஐ அதிகாரிகளுக்கு என தனியாக சகலவசதிகளுடன் வங்கி அதிகாரிகள் அறையை ஏற்படுத்திக் கொடுத்துருக்காங்க.
வழக்கு முடியற வரை மீடியாவிடம் எதையும் சொல்லக்கூடாது என சிபிஐ நிபந்தனை விதித்தது. தொடர்ந்து வங்கி ஊழியர்களிடம் ஒவ்வொருவராக விசாரணை நடக்க ஆரம்பித்தது. முன்னாள் வங்கி ஊழியர் சம்பவத்தை சிபிஐ அதிகாரிகளிடம் நேரில் பார்த்ததை விவரிக்கிறார்.
அவரது வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு வாகனங்களைப் பிடித்தனர். இறுதியில் கொள்ளையர்கள் சிக்கினார்கள். 20 பேர்களைப் பிடித்தனர். 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. சீக்கியர் பிரிவினைவாதிகளுடன் தொடர்புடையவர்கள் 13 பேர் இருந்தனர்.
நிறைய ஆயுதங்களை வாங்க திட்டம் போட்டனர். 9 பேர் முக்கிய குற்றவாளிகள். இவர்களை தனித்தனியாக சிறைகளில் அடைத்தனர். தண்டனை கைதிகள் மேல்முறையீடு செய்கின்றனர். 9 பேரையும் சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. பல ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்ததால் விடுதலை கிடைத்தது.
துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைக்க எச்.வினோத் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் அஜீத்தின் ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். தாய்லாந்து மற்றும் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
இயக்குனர் எச்.வினோத்துக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்கள் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தப் படமும் மாபெரும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.
இந்நிலையில் அஜித்தின் 63 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்னவெண்டாரால் அஜித் விஷ்ணுவராதன் இயக்க உள்ளார் என்றும் அந்த படம் பிரமாண்ட பொருட்செலவில் ப்ரியாடிக் படமாகவும் படத்தின் அஜித் ராணுவ ஜவான் போர்வீரன் என்று சொல்வது போல் உள்ளதாக தெரிகிறது ..இந்த செய்தி தற்போது வைரலாகிவருகிது
It's Very earlier to say #Ak63 Tamil Miltry jawan warrior on perodic strory from our all time #AK Favorite Director @vishnu_dir
— Nazrudheen Appu (@cz_binance_QeM_) November 3, 2022
#AK63 Director @vishnu_dir with AK old still @SureshChandraa @ProRekha pic.twitter.com/dlzjH1MMpT
— Nazrudheen Appu (@cz_binance_QeM_) November 3, 2022
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.