Monday, April 29, 2024 7:45 pm

தமிழ்நாடு தாண்டி தான் No :1 இடத்தில துணிவு!வசமாக வாரிசை அடிபணிய​ வைத்த​ அஜித்தின் துணிவு !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் தற்போது தமிழகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. நட்சத்திரம் சமீபத்தில் விமான நிலையத்தில் காணப்பட்டது மற்றும் அவரது ரசிகர்கள் அவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கூட்டம் படம் எடுக்க ஆரம்பித்ததும் பொறுமையாக நின்றார். உடல் ஊனமுற்ற நபருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார், தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எச் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் துணிவு படத்தின் வெளியீட்டிற்காக அஜித் காத்திருக்கிறார். அவரது வரவிருக்கும் துணிவு திரைப்படத்தின் நலனுக்காக அவர் தனது தனிப்பட்ட ‘விளம்பரம் இல்லாத’ விதியை மீறுவார் என்று சமீபத்தில் ஊகங்கள் பரவின. ஆனால், இந்த ஊகங்களில் உண்மை இல்லை என்று தெரிகிறது. சூப்பர் ஸ்டாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில், “ஒரு நல்ல படம் தானே விளம்பரம்!


இந்நிலையில் எப்போதும் அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதினால் திரையரங்கமே கலைகட்டும். இந்த நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் மோதவுள்ளதால் திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளிக்கப்போவது உறுதி என தெரியவருகிறது.

இதனிடையே “வாரிசு” திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித்குமார் பெற்றுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்தது. இந்த செய்தி வெளிவந்த சில நாட்களிலேயே “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

மேலும் மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, இது குறித்து தனது பேட்டியில் கூறியபோது, நடிகர் விஜய்தான் இந்த விஷயத்தில் தலையிட்டு, “வாரிசு” திரைப்படத்தின் வெளியீட்டு உரிமை லலித்குமாருக்கு கிடைப்பது போல் பார்த்துக்கொண்டார் என்ற தகவலை கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டின் அதிக திரையரங்குகளை “துணிவு” திரைப்படத்திற்காக ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான லலித்குமார், “வாரிசு” திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடமே கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆதலால் “வாரிசு” திரைப்படத்தை வெளியிட ரெட் ஜெயன்ட் நிறுவனம் மறைமுகமாக உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. திரைப்பட தயாரிப்பாளர் மூவரும் முன்பு நேர்கொண்ட பார்வை, பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் மற்றும் வலிமை ஆகியவற்றில் பணியாற்றினர். இப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளுக்கு வர உள்ளது. இது விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான வரிசுவுடன் பாக்ஸ் ஆபிஸில் மோதவுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்