Monday, April 29, 2024 7:30 pm

நடிகை ரம்பாவின் கார் விபத்து உள்ளானது !! 24 மணி நேரத்திற்குள் நடந்த விபத்து !! ரசிகர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கனடாவில் உள்ள தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பிய நடிகை ரம்பா கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பிய போதிலும், அவரது இளைய மகள் சாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் இதைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார், மேலும் தனது மகளுக்காக பிரார்த்தனை செய்யும்படி தனது ரசிகர்களைக் கேட்டார்.

பிரபல நடிகையான ரம்பாவின் கார் சற்று நேரத்திற்கு முன் விபத்தில் சிக்கியது. பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது, ரம்பா கார் மீது மற்றொரு கார் மோதியது. அதில், ரம்பா உள்ளிட்ட அவரது குழந்தைகளும் படும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், இளையமகள் சாஷாவிற்கு படுகாயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த ரம்பா, அதை வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த பதிவு.

”பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது! “நான் குழந்தைகளுடன் மற்றும் என் ஆயா” நாங்கள் அனைவரும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம்  என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார் மோசமான நாட்கள் கெட்ட நேரம்”

என்று அந்த பதிவில் ரம்பா தெரிவித்துள்ளார்.

90களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா, இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்தார். கணவருடன் கனடாவில் குடிபெயர்ந்தார் ரம்பா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது இந்தியா வந்து தன் உறவினர்கள், சினிமா தோழர்களை சந்தித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள ரம்பா, குழந்தைகள் மீதும் குடும்பம் மீதும் அலாதி ப்ரியம் கொண்டவர்.

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டே இருப்பவர். சமீபத்தில் நடிகை மீனாவை சந்தித்து அவருடைய கவலைகள் மறக்க, அவருடன் நேரத்தை செலவு செய்தவர். தமிழ் குடும்ப பின்னணியில் தன் வாழ்வியல் முறையை மாற்றிக் கொண்டவர். முன்பு சினிமாவுக்குப் பின் டிவி நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த ரம்பா, அதன் பின் குழந்தைகளுடன் முழுநேரமாக தன் பொழுதை கடத்தத் தொடங்கினர். இந்நிலையில் தான் கனடாவில் தன் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும் போது, எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் அவரது குடும்பம் சிக்கியுள்ளது.

ரம்பாவின் இந்த சோக பதிவைத் தொடர்ந்து, தமிழ் நடிகைகள் பலரும் தங்கள் ஆறுதலை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

என்று அந்த பதிவில் ரம்பா தெரிவித்துள்ளார். விபத்து நடக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு தான், அதாவது அந்த குழந்தை பள்ளிக்குச் செல்லும் முன்பு தான் ரம்பா ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், தற்போது தீவிர சிகிச்சையில் உள்ள குழந்தை சாஷா, ப்ரென்ச் பாடல் ஒன்றை தன் தாயின் தோள் மீது அணைத்த படி பாடிக் கொண்டிருந்தது. க்யூட்டாக அந்த குழந்தை பாட, அதை பிரமிப்பாக பார்த்து ரசித்தபடி பூரித்து போயிருந்தார் ரம்பா.

யார் கண் பட்டதோ, வீடியோ வெளியிட்ட 24 மணி நேரத்திற்கு முன்பே, அந்த குழந்தை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. பலருக்கும் உதவும் எண்ணம் கொண்ட ரம்பாவிற்கு இந்த நிலையா, என் பலரும் இச்சம்பவத்தால் கவலையடைந்துள்ளனர்.

90களில் சுறுசுறுப்பாக இருந்த இந்திய சினிமாவின் பிரபலமான முகங்களில் ரம்பாவும் ஒருவர். விஜயலட்சுமி யீடியில் பிறந்த இவர், ரஜினிகாந்த், அஜித், விஜய், சல்மான் கான், சிரஞ்சீவி மற்றும் மம்முட்டி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்