அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் தமிழ் படம் நித்தம் ஒரு வானம், தணிக்கை குழுவில் யு சான்றிதழ் பெற்றுள்ளதாக தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். படத்தை நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
தெலுங்கில் ஆகாசம் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ரா கார்த்திக் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் வீரா, அர்ஜுன், பிரபா என மூன்று வேடங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நித்தம் ஒரு வானம்/ஆகாசம் என்பது இந்தியா முழுவதும் சென்னை, பொள்ளாச்சி, டெல்லி, கொல்கத்தா, சிக்கிம் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட பயணக் கதை நாடகமாகும். அதுமட்டுமின்றி இப்படத்தில் அபிராமி மற்றும் காளி வெங்கட் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Certified with Clean "U" with zero cuts.
A feel-good Travelogue movie #NithamOruVaanam is releasing on
Nov 4th, Enjoy with your family!@Rakarthik_dir @AshokSelvan @riturv @Aparnabala2 @shivathmikaR @AndhareAjit @PentelaSagar @GopiSundarOffl @vidhu_ayyanna @editoranthony pic.twitter.com/sL8n0qvUBG— Rise East Entertainment (@riseeastcre) October 25, 2022
இமயமலையில் உள்ள ரோஹ்தாங் லாவில் நடந்த படப்பிடிப்பு அனுபவம் குறித்து முன்னதாக சினிமா எக்ஸ்பிரஸிடம் பேசிய அசோக் செல்வன், “எனது முதல் ஷாட்டுக்கு, நான் கேமராவை நோக்கி நடக்க வேண்டியிருந்தது. கார்த்திக் மைக்கில் ஆக்ஷன் சொன்னவுடன் நான் நடக்க ஆரம்பித்தேன். திடீரென்று, என்னைச் சுற்றி பனி விழுவதைக் கண்டேன்! ஐந்து நிமிடங்களில், கடும் பனிப்பொழிவு ஆரம்பித்து, 30 நிமிடங்களுக்குள் தரையை முழுவதுமாக பனி மூடியிருந்தது! நாங்கள் அனைவரும் பரவசமடைந்தோம்.
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வயாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு வித்து அய்யன்னா, படத்தொகுப்பு ஆண்டனி, இசை கோபி சுந்தர்.