தெலுங்கின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் பிரபாஸ், “பாகுபலி” திரைப்படம் மூலம் பேன் இந்தியா நடிகராக அறியப்பட்டார். அதன் பின் “சாஹோ”, “ராதே ஷ்யாம்” போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபாஸ் தற்போது “ஆதிபுருஷ்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இணையத்தில் பலரும் இத்திரைப்படத்தின் டிரைலரை கேலி செய்துவருகின்றனர். “கார்ட்டூன் படம் போல் இருக்கிறது” என பலரும் கம்மென்ட் அடித்து வருகின்றனர்.
ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கிரித்தி சனான் நடித்துள்ளார். மேலும் செயிஃப் அலிகான், சன்னி சிங் என பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பேன் இந்தியத் திரைப்படமாக வெளிவருகிறது. மேலும் இத்திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தால் “வாரிசு” திரைப்படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
“வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் ஆந்திரா பகுதிகளில் “வாரிசு” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர் “ஆதிபுருஷ் திரைப்படம் வெளிவருவதால் வாரிசு திரைப்படத்திற்கு ஆந்திராவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் பொங்கலுக்கு 4 நாட்கள் கழித்துதான் தெலுங்கில் வாரிசு திரைப்படம் வெளியாகிறது” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.