அஜித் தற்போது தனது 61வது படமான ‘துணிவு’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ‘ஏகே 61’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார் மற்றும் போனி கபூர் தயாரித்துள்ளார். ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித், இயக்குநர் எச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மூவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் தான் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது புதிய அப்டேட் என்னவென்றால், படத்தின் டிஜிட்டல் உரிமையை சர்வதேச OTT தளம் வாங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே படத்தின் டிஜிட்டல் திரையிடல் மற்றும் பிரீமியரை வாங்க OTT இயங்குதளம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் சாட்டிலைட்டையும் முன்னணி தமிழ் சேனல் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் என எதிர்பார்த்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் துணிவு படம் ஒரு மிகப்பெரிய பேங்க் ராபரி சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. மணி ஹெய்ஸ்ட் என்ற வெப் சீரிஸின் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது ஒரு சமூக பிரச்சனையை வினோத் இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார்.
சமீபகாலமாக பலரும் சந்தித்து வரும் பிரச்சனை வங்கிகடன். அதுவும் கோவிட் தொற்று காரணமாக பலர் தங்களது வேலையை இழந்த சூழ்நிலையில் அவர்கள் வாங்கிய வங்கி கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மல்டி நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறது.
லோன் வாங்கிய கஸ்டமரை எல்லோர் முன்னிலைகளும் அசிங்கப்படுத்துவது, அவமானப்படுத்துவது என பல மட்டமான வேலைகளை செய்து வருகின்றனர். இதை தாங்க முடியாத சிலர் வேறு வழி இன்றி தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இதற்கு காரணம் வங்கி ஊழியர்கள் கடுமையாக நடந்து கொள்வது தான்
தத்ரூபமாக எடுத்துள்ளாராம் வினோத். மேலும் இதுபோன்று வாடிக்காளர்களை மோசமாக நடத்தும் பேங்கை குறி வைத்து ராபரி நடைபெற உள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் யாரை போய் சேர்கிறது என்பது படம் வெளியான பிறகு தெரியவரும்.
மேலும் வினோத் இயக்கத்தில் கடைசியாக வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு விஷயத்தை துணிந்து கையில் எடுத்து துணிவு படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் வெளியான பிறகு சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்டது, அதில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் லவுஞ்ச் நாற்காலியில் ஓய்வெடுக்கும் அஜீத் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதன் பின்னணியில் இருந்த போஸ்டரில் பழைய இந்திய ரூபாய் நோட்டும் இருந்தது. சுவரொட்டியில் தைரியம் இல்லை, பெருமை இல்லை என்ற வாசகமும் இருந்தது.
இப்படம் வங்கி திருட்டு என கூறப்பட்டு வரும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் அஜய் ஆகியோரும் படத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.