அஜித் தற்போது தனது 61வது படமான ‘துணிவு’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ‘ஏகே 61’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார் மற்றும் போனி கபூர் தயாரித்துள்ளார். ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித், இயக்குநர் எச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மூவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘துணிவு’.
அஜித் இன்றைய கோலிவுட்டின் முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார். ஆனால் அவருக்கு இந்த வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. பல பிரச்சனைகளை சந்தித்தே அவர் தனக்கென அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தல அஜித். ஆண் ரசிகர்களுக்கு பெரிய அடையாளமாக விளங்கி வருகிறார். அவரை பிடிக்காது எனக் கூறுவர்கள் அனைவருமே அவரின் கடின உழைப்பை பாராட்டி விடுவர். இந்நிலையில் முதல் படத்தில் அஜித்திற்கு வாய்ப்பு கிடைத்தது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித் முதலில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அப்படம் எதிர்பாராமல் கைவிடப்பட்டது. இருந்தும் அஜித் நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் என பிடிவாதத்துடன் தனக்கான இடத்தை தேடிக்கொண்டு இருந்தார். அப்போது, தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளர் பூர்ண சந்திரராவ் தனது ப்ரேம புஸ்தகம் படத்திற்கு ஹீரோவை தேடிக்கொண்டு இருந்தார்.
படத்தின் படப்பிடிப்புகள் துவங்க இருந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியனிடம் எதுவும் ஹீரோ கிடைப்பார்களா என பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது எஸ்.பி.பி தன்னிடம் ஒருவர் கொடுத்த புகைப்படத்தை கொடுத்து இந்த பையன் ஓகேவா என பார்க்க கூறி இருக்கிறார்.
முதல்முறை அஜித் படத்தை பார்த்த பூர்ண சந்திரராவிற்கு அவரை பிடித்துவிட்டது. உடனே அவரை புக் செய்து படப்பிடிப்புகளும் துவங்கிவிட்டது. தனது ஹீரோ கனவு பலித்து விட்டதாக நினைத்த அஜித்திற்கு அங்கும் ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது. விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, இயக்குனர் கொள்ளங்குடி சீனிவாச ராவ் தவறுதலாக தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டார். அஜித் ராசியில்லாதவர் என பேச்சுகள் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், பூர்ண சந்திரராவ் இயக்குனரின் தந்தை மாருதி ராவை வைத்து அப்படத்தை முடித்தார். ஆனால், சுமாராகவே அப்படம் ஓடியது. தொடர்ந்து, தமிழில் அஜித்திற்கு வாய்ப்பு வந்தது தான் சுவாரஸ்யம். தமிழில் உருவாகிக்கொண்டிருந்த அமராவதி படத்திற்கு சங்கவி நாயகியாக ஒப்பந்தம் ஆகினார்.
நாயகனாக ஒரு முகத்தை தேர்ந்தெடுத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வாவிற்கு அது பிடிக்கவில்லையாம். புதுமுகம் தேடி அலைந்து கொண்டிருந்தார். அப்போது, மேனஜர் மூலம் ப்ரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். வாய்ப்பு கொடுங்க என அஜித்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இயக்குனர் செல்வாவிற்கு முதல் அறிமுகத்திலேயே அஜித்தை பிடித்து விட்டது. அவரும் அமராவதி படத்தில் நடிக்க அப்படமும் அஜித்திற்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. படம் வரும்போது நடி, வரும் சீரியல் வாய்ப்பை பயன்படுத்திக்கோ என சிலர் அறிவுரை கூறி இருக்கிறார்கள். ஆனால் அஜித்தோ நடித்தால் சினிமா தான் என உறுதியாக இருந்து இருக்கிறார்.
அப்போது, அவர் தனது கவனத்தை பைக் ரேஸில் செலுத்த, பெரிய பிரச்சனை அங்கு தான் இருந்தது. ஆம், அஜித்திற்கு பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டு முதுகு தண்டு வடத்தில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு தான் அஜித்திற்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கே.எஸ். சுபாஷ் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் உருவான பவித்ரா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படத்திலும் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் ஹீரோவை சுற்றி தான் கதை செல்லும் என்பதால் அஜித் அப்படத்தை ஒப்புக்கொண்டிருந்து இருக்கிறார். தொடர்ந்து, வீல் சேரில் படப்பிடிப்புக்கு வந்து அந்த படத்தில் நடித்து கொடுத்தாராம். அப்படம் தமிழில் அஜித்தை ஒரு ஹீரோவாக சென்று சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அஜித் வாய்ப்பு தேடி போக தேவையில்லை என்றாலும் அவரின் தொடக்க காலம் அவருக்கு பெரும் சோதனை என்றே சொல்ல வேண்டும்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் தான் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது புதிய அப்டேட் என்னவென்றால், படத்தின் டிஜிட்டல் உரிமையை சர்வதேச OTT தளம் வாங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே படத்தின் டிஜிட்டல் திரையிடல் மற்றும் பிரீமியரை வாங்க OTT இயங்குதளம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் சாட்டிலைட்டையும் முன்னணி தமிழ் சேனல் வாங்கியதாக கூறப்படுகிறது.