பிரபல நடிகை காஜல் பசுபதி தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமடைந்தார். இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.முதன் முதலில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார்.
இதில் காஜல் பசுபதி ஒரு நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பின்னர் ஜீவாவின் டிஷ்யூம் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் பிரபல நடன இயக்குனர் சாண்டியை காதலித்து இருவரும் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர்.
ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பிரிந்து விட்டனர். தற்பொழுது சாண்டி வேறு திருமணம் செய்து கொண்டு அவருக்கு குழந்தையும் பிறந்து விட்டது. ஆனால், காஜல் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இத்தகைய சூழலில், சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிசியாக செயல்பட்டு வரும் நடிகை காஜல் பசுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தனக்கு இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதாகவும், “சிறிய அளவிலான நிகழ்ச்சி என்பதால் எந்த பரிசுகளையும் யாரும் கொண்டு வர வேண்டாம். என்னை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு ஒரு நபரை மட்டும் அழைத்து வந்தால் போதும்.” என்று தெரிவித்துள்ளார். இதை கண்ட பலரும், “நாங்க ரெடி நீங்க ரெடியா?” என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.