ரத்ன குமாரின் சமீபத்திய படம், சந்தானம் நாயகனாக நடித்த குலு குலு, ஜூலை 29 அன்று கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.தற்போது, இப்படம் ஆகஸ்ட் 27 முதல் சன் என்எக்ஸ்டியில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேயாத மான் மற்றும் ஆடைக்கு பிறகு ரத்னகுமார் இயக்கும் மூன்றாவது படம் இது.
ஜார்ஜ் மேரியன், தீனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதுல்யா சந்திரா உள்ளிட்ட பல நடிகர்களைக் கொண்ட குலு குலு, நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு நபரின் தவறான சாகசங்களைப் பற்றியது.
சந்தோஷ் நாராயணனின் இசையில், குலு குலுவின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோர் கையாள்கின்றனர்.
இந்நிலையில் ஹீரோவாக நடித்த புதிதில் ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.போக போக அவரின் படங்கள் சரிவர போகாததால் கொஞ்ச நாள் பிரேக் எடுத்துக் கொண்டார். நீண்ட நாள்களுக்கு பிறகு அவரின் நடிப்பில் குலு குலு என்ற படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படமும் சரிவர போகவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வந்த சந்தானத்தை தொடர்பு கொண்டு பேசினார் நடிகர் ஆர்யா.
சும்மாதான இருக்க. கேப்டன் படம் டிரெய்லர் லாஞ்ச் விழா நடக்கிறது. கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்பு விடுத்த ஆர்யாவின் அழைப்பை மீற முடியாமல் விழாவிற்கு வந்தார் சந்தானம். அப்போது மேடையில் பேசிய சந்தானம் நான் ஒரு தனி டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறேன். ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
எத்தனையோ இயக்குனர்கள், நடிகர்கள் என் படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணுங்க, முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது என்றெல்லாம் கூறி அழைத்தார்கள். ஆனால் எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லை. நான் திரும்பவும் யாருடனும் நடிக்க வேண்டும் என்றால் அது ஆர்யா கூட தான் நடிப்பேன். அதுவும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் கண்டிப்பாக நான் இருப்பேன் என கூறினார். இதிலிருந்து அவர் பழைய ஃபார்முக்கும் வர தயாராக இருக்கிறார் என தெரிகிறது. வெளிப்படையாக கூற கூச்சப்பட்டு மறைமுகமாக தன் ஆசையை தெரிவித்துள்ளார் என தெரிந்த சில வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் இந்தப் படத்திற்கு ஆதரவளிக்கப்பட்டது.இதற்கிடையில், ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட சுவாரசியமான படங்கள் வரிசையாக உள்ளது சந்தானம்